இன்று படித்தவை-13: நவம்பர் 28, 2009


படிக்கவேண்டும் என்று புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும், சஞ்சிகைகளையும் மேஜை மேல் அடிக்கிக்கொண்டே போகிறேன். பத்து புத்தகம் அல்லது பத்திரிக்கை வாங்கி, ஒன்றை எடுத்துப் படித்து முடிப்பதற்குள் அடுத்த பத்து வந்து சேர்ந்துவிடுகின்றன. என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒரு காலத்தில் ஹேரி லோரைன் வேகமாகப் படிக்கும் முறையை (Harry Loraine Speed Learning Technique) ஓரளவு பயின்று அதைப் பின்பற்றியும் இந்த நிலை.

புதிய தலைமுறை, வார இதழ், அக்டோபர் 15, 2009:
————————————————————-

புதிய தலைமுறை வார இதழ் மெருகேறிக்கொண்டே போகிறது. தமிழில் இப்படி ஒரு இதழ் இருப்பது பேரு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மிகவும் பின்தங்கியிருக்கிறேன் – நான்கு இதழ்கள் சேர்ந்துவிட்டது!

இந்த இதழில் என்னைத் தொட்ட சில மட்டும்:

1. தேவை: சிகரெட் உற்பத்திக்குத் தடை

பொது இடங்களில் புகைக்க தடைச் சட்டம் வந்து ஓராண்டைத் தாண்டியும் எதிர்பார்த்த பலன் இல்லை. நிறையப் பேர் பொது இடங்களில் புகைக்கின்றனர். அவர்களை யாரும் எதுவும் செய்வதில்லை. இதைப் பற்றிய மாலன் அவர்களது கட்டுரை.

2. பத்தாயிரம் மைல் பயணம்

வெ.இறையன்பு அவர்களின் இனிய கட்டுரை. பல பயனுள்ள, சுவையான தகவல்கள் அடங்கியது. முதல் வரியே அருமை: “சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. “ஒருவன் மரணமடைவதற்கு முன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும், பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்”. பத்தாயிரம் மைல் நடக்கிறேனோ என்னவோ, பத்தாயிரம் புத்தகங்கள் நிச்சயம் படித்திடுவேன்.

“பயனங்கலால்தான் வரலாற்று நூல்கள் உருவாயின. முதல் வரலாற்று நூலை எழுதியவர் ஹிரோடட்டஸ். அவர் சரித்திரங்கள் என்ற பெயரில் ஒன்பது புத்தகங்களை எழுதினார். ஒரு சுற்றுலாப் பயணியைப்போல ௨௪௩0 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டிலிருக்கும் மூன்று பிரமிடுகளைப் பார்வையிட்டார். பயணத்தின்போது அவர் பார்த்தவையும், கேட்டவையும் அவரை நூலாசிரியராக மாற்றியது. பயணம் நமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருகின்ற ஒளிச்சாதனமாய்த் திகழ்கிறது.”

“பயன்களால் தேசங்கள் இணையும். தடுப்புச் சுவர்கள் உடையும். அன்பு பெருகும். பண்பாடு பரிமாறப்படும். விஞ்ஞானம் செழிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும்…”

இப்படி பல சுவாரஸ்யமான, சுவையான செய்திகள்.

3. அன்று பத்தாம் வகுப்பு தவறியவர் இன்று பிஎச்.டி.

கல்வி தடைப்பட்டால் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என்று தன்னம்பிக்கை ஊட்டும் முனைவர் பரசுராம் அவர்களைப்பற்றிய யுவகிருஷ்ணா அவர்களின் கட்டுரை.

4. தெய்வம் தந்த பூ!

இந்தக் கட்டுரையைப் பார்த்துவிட்டுத்தான் நானும், தம்பி நெல்லையும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை எல்லாம் சென்று வந்தோம். மறக்க முடியாத அனுபவங்கள். ஏற்கனவே இந்த வலைப்போவில் தனியே பதிவு செய்துள்ளேன் படங்களுடன்.

5. உருப்பட ஒரு புத்தகம்: “உன்னதம் உங்கள் இலக்கா?”

“நீங்கள் உன்னதங்களை நேசிப்பவரா? உன்னத நிலையை கனவு காண்பவரா? அடைய முயற்சி கொண்டிருப்பவரா? “

உன்னத நிலையை அடைவதற்கான வழிகளைக் கூறும் பா.ராகவன் அவர்கள் எழுதிய “எக்ஸலன்ட்” என்ற சுய முன்னேற்ற நூலைப் பற்றிய கட்டுரை.

இன்னும் பல கட்டுரைகள், பயனுள்ள செய்திகள், தகவல்கள். குறிப்பாக இளைஞர்கள் வாங்கிப் படித்து, தொக்குத்து வைக்க வேண்டிய பொக்கிஷம். ஆசிரியர் திரு மாலன் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிலுள்ள மற்றவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

A Thought for Today-277:

If you seek a tranquil mind, observe these with care: Of whom you speak, to whom you speak, and how, when and where – Anonymous

Picture of the day-90:

கருத்துக்கள்-18: "பரிசுகள்"



பரிசுகள் வழங்கும் பழக்கம் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவானது. திருமணம், பிறந்தநாள், மணிவிழா, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்று பல சமயங்களில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் போட்டிகளுக்கும், மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் படுகின்றன.

இதில் பிரச்சினை என்னவென்றால் பரிசுப் பொருளை தேர்ந்தெடுப்பது. என் நண்பர் ஒருவர் கூறினார்: “என் வீட்டில் கழிப்பறை தவிர எல்லா அறைகளிலும் சுவர்க்கடிகாரம் உள்ளது. அத்தனையும் பரிசாக வந்தது.” ஒரு சமயத்தில் பல பேர் ஒரே பொருளை பரிசாக வழங்கி, பெற்றவர் அதை என்ன செய்வது என்று தெரியாமல், அடுத்து வரும் வாய்ப்பில் அதை அவர் மற்றவர்க்கு பரிசாக வழங்கி, அப்பாடா என்று பெருமூச்சு விடலாம்.

இந்த பிரச்சினைக்கு விடையாக சிலர் பணமாகவே பரிசுகளை வழங்கி விடுகின்றனர். இதிலும் வேடிக்கை இருக்கிறது. ஒரு பெரும் பணக்காரருக்கு ஒன்றுமே இல்லாத சாதாரண மனிதர் பணம் பரிசாகக் கொடுப்பது.

நானறிந்தவரை இதற்கு சரியான விடை நல்ல புத்தகங்களை பரிசாக வழங்குவதே. பெறுபவரின் விருப்பு வெறுப்புகளை ஓரளவு அறிந்திருந்தால் சரியான புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடியும்.

காரைக்குடியில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பம் அளித்தோம். பள்ளிகளில் வழங்கப்படும் பரிசுகள் அனைத்தும் புத்தக வடிவில் இருக்க வேண்டும். பல பள்ளிகள் பிளாஸ்டிக் சாமான்கள், பாத்திரங்கள் என்று பரிசு வழங்கியதை மாற்றி, புத்தகங்களைப் பரிசாக வழங்கினர்.

சமீபத்தில் நடந்த எனது மணிவிழாவில் இரண்டு அன்பர்கள் மட்டும் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். ஒரு அன்பர், சிரிக்க வேண்டாம், இரயில்வே கால அட்டவணையைப் பரிசாக வழங்கினார்! இன்னொரு நண்பர் ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிந்தனைத் தொகுப்பான, “ஆயிரம் ஜன்னல்” என்ற அற்புதமான நூலையும், சுஜாதாவின் “கடவுள்” என்ற நூலையும் அன்புப் பரிசாக வழங்கினார்.

ஒன்று இரண்டுமே என்னிடம் இல்லாத புத்தகங்கள். இரண்டாவது இரு நூலாசிரியர்களும் நான் பெரிதும் மதிப்பவர்கள். ஆயிரம் ஜன்னலில் முதல் இரு அத்தியாயங்களைப் படித்து விட்டேன். என் மனதிற்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கின்றது. அற்புதமான புத்தகம் என்பதை அவை கட்டியம் கூறுகின்றன. ஏற்கனவே சத்குரு அவர்களின் “அத்தனைக்கும் ஆசைப்படு” புத்தகத்தை மூன்று முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை தேர்ந்தெடுத்த பகுதிகளை எனது குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறேன். ஈடு இணையற்ற நூல் அது.

இந்த இரு புத்தகங்களை வழங்கிய அன்பர் பணத்தைச் செலவு செய்தது மட்டுமல்லாமல், நேரத்தை செலவு செய்து, சிந்தனை செய்து, எனக்கு என்ன பிடிக்கும் என்று யூகித்து, புத்தகக் கடையைத் தேடிச் சென்று அருமையான இந்த இரு புத்தகங்களை வாங்கியிருக்கிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இத்தருணத்தில் எனது மணிவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அன்பர்கள், சிறப்பாக நடக்க உதவிய அன்பர்கள், பரிசுகள் வழங்கிய அன்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

"Shades of Green", excerpt from the book ‘Whole Earth Discipline" by courtesy of Conservation Magazine

To read an excerpt from the book, ‘Whole Earth Discipline’ by Stewart Brand, by courtesy of Conservation Magazine, click the URL underlined below:

Introduction to the excerpt from Conservation Magazine:

An icon of the environmental and counterculture movements of the 1960s, Stewart Brand created and edited The Whole Earth Catalog (1968–1985). Since then, he has cofounded the Global Business Network, The Long Now Foundation, and the All Species Foundation. Here, we offer you a small taste of his latest book, Whole Earth Discipline – (reproduced from Conservation Magazine).

Conservation Magazine » Blog Archive » Shades of Green

Posted using ShareThis

Grateful thanks to Stewart Brand, Conservation Magazine and ShareThis.

Book Reviews by Judy Wexler from Conservation Magazine » Blog Archive » Book Reviews, Fall 2009

Book Reviews by Judy Wexler from Conservation Magazine.

Books Reviewed:

1. Elephants on the Edge
What Animals Teach Us about Humanity

By G.A. Bradshaw
Yale University Press, 2009

2. Hope for Animals and Their World
How Endangered Species Are Being Rescued from the Brink

By Jane Goodall with Thane Maynard and Gail Hudson
Grand Central Publishing, 2009

3. No Impact Man
The Adventures of a Guilty Liberal Who Attempts to Save the Planet and the Discoveries He Makes About Himself and Our Way of Life in the Process

By Colin Beavan
Farrar, Straus and Giroux, 2009

4. The Jaguar’s Shadow
Searching for a Mythic Cat
By Richard Mahler
Yale University Press, September 2009

5. Climate Change:
Picturing the Science
By Gavin Schmidt and Joshua Wolfe
W.W. Norton, 2009

6. Nature’s Ghosts
Confronting Extinction from the Age of Jefferson to the Age of Ecology
By Mark V. Barrow, Jr.
University of Chicago Press, 2009

7. Extinction in our Times
Global Amphibian Decline
By James P Collins and Martha L.Crump
Oxford University Press, 2009

For reading reviews of all the abov ebooks just click below:

Conservation Magazine » Blog Archive » Book Reviews, Fall 2009

Posted using ShareThis

Grateful thanks to Judy Wexler, Conservation Magazine and ShareThis.

Self-Improvement-60: "The Law of Success" by Napoleon Hill

Grateful thanks to Loomis1324 and YouTube.

Picture of the day-89:

A Thought for Today-276:

Praise undeserved is scandal in disguise – Alexander Pope

கருத்துக்கள்-17: "கண் திருஷ்டி" (Evil Eye)

கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஒரு வீட்டுச் சுவரில் அந்த அழகியகண் திருஷ்டி விநாயகர்படத்தைக் கண்டேன். கேமெரா கையில் இல்லை. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அது கண் திருஷ்டி பற்றி என்னை சிந்திக்க வைத்தது. பொறாமைக்காரர்கள், வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் பார்வை நம்மை பாதிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடையே பரவலாக இருக்கிறது. பல வீடுகளில் சுவற்றிலோ அல்லது வாசலிலோ கண் திருஷ்டி விநாயகர் படத்தைப் பார்க்கலாம். சில வீடுகளில் திருஷ்டி பூசணிக்காயை கட்டித் தொங்கவிட்டிருப்பர்கள். அல்லது கோரமான ராக்ஷஸ உருவத்தின் படத்தை மாட்டியிருப்பார்கள். இதை மூட நம்பிக்கை என்று எளிதாக தள்ளிவிடலாம்.

ஆனால் இதில் ஏதோ உண்மை இருக்கிறது என்பதை என்னால் கூறமுடியும். நான் ஹோமியோபதி பயின்ற காலத்தில்அஸாரம் யூரோப்பியம்‘ (Asarum Europeum) என்ற மருந்தைப் பற்றி படித்திருக்கிறேன். (‘நிலக் கடம்புஎன்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் கண் திருஷ்டிக்கான (Evil Eye) மருந்து அது). எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மேலை நாட்டினரிடமும் இது போன்ற நம்பிக்கை இருப்பது. மேலும் அந்த மருந்திற்கான அனுபவக் குறிப்புகளில் ஹோமியோபதி மருத்துவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்தியதைக் கூறியிருந்தார்கள்.

நன்றாகப் பால் கொடுத்துக் கொண்டிருந்த கொழு கொழுவென்றிருந்த பசுமாடுகள் திடீரென பால் கொடுப்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், உருக்குலைந்து எழும்பும் தோலுமாக ஆகின. அவற்றை ஹோமியோ மருத்துவர்கள் குணப்படுத்தியிருக்கிரார்கள். எனவே மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும்கெட்ட பார்வையால்பாதிக்கப் படக்கூடும்.

நம் தமிழ்நாட்டிலேயே ஒரு புகழ் பெற்ற ஹோமியோபதி மருத்துவர் இதைப் பற்றிக் கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. அவரது உறவினரின் குழந்தை வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி மற்றும் இனிமையான குரல், ஸ்லோகங்கள், பாடல்களை மிகத் தெளிவாகப் பாடி அனைவரையும் கவரும் தன்மை பெற்றிருந்தது. ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு ஒரு பெண்மணி வந்திருந்தபோது, வழக்கம்போல் அந்தக் குழந்தையை அழைத்து பாடச் சொன்னார்கள். அதன் பாடும், பேச்சும் அந்தப் பெண்மணியை மிகவும் கவர, அவர்குழந்தை என்னமா பாடுகிறாள்என்று வியந்து பாராட்டிச் சென்றாராம். திடீரென அது முதல் அந்தக் குழந்தை பேச முடியாமல் போனது. பெரிய மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியவில்லை, என்ன நோய் என்று அறியவும் முடியவில்லை. இறுதியில் அப்போது ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த பின்னாளில் புகழ் பெற்ற அந்த ஹோமியோபதி மருத்துவர், அந்தக் குடும்பத்தில் ஒருவர். குழந்தையின் பெற்றோர் எப்படியாவது குணமானால் சரி என்று சம்மதிக்க. அவர் ‘அஸாரம் யூரோப்பியம்என்ற மருந்தைக் கொடுக்க, குழந்தை விரைவில் குணமடைந்து, முன்போல் பாட, பேச ஆரம்பித்து விட்டாள். இதெல்லாம் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். ஆனால் நான் இதை முழுமையாக நம்புகிறேன்.

A Thought for Today-275:

As long as there is a body, there must be pleasure and pain – Swami Vivekananda

Picture of the day-88:

A Thought for Today-274:

Revenge is the poor delight of little minds – Juvenal

Picture of the day-87:

Picture of the day-86:

நண்பர் கிருஷ்ணன் அவர்களது மணிவிழா






இன்று நண்பர், சாமி.கிருஷ்ணன் அவர்களது மணிவிழா. எனது மணிவிழா முடிந்து பத்து நாட்களில் இன்னொரு மணிவிழா!

முனைவர் சாமி.கிருஷ்ணன் எங்கள் அலுவலகத்தில் உலோக அரிமானப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி. நான் அந்தப் பிரிவில் பணியாற்றியபோது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

அவர் அன்னை-அரவிந்தர் மீது பற்றுக் கொண்டவர். எனது ஈடுபாடோ ஸ்ரீஇராமகிருஷ்ணர்-அன்னை சாரதாதேவி-சுவாமி விவேகானந்தர் மீது. நாங்கள் நேரம் கிடைக்கும்போது ஆன்மீகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

வருடத்தில் மூன்று-நான்கு முறை பாண்டிச்சேரி சென்று அரவிந்த ஆஸ்ரமத்தில் தங்குவார். போகும்போதெல்லாம் என்னையும் அழைப்பார். இறுதியில் ஒருநாள் அவருடன் சென்றேன். தங்குவதற்கு ஆஸ்ரம சர்வதேச விடுதியில் அறை பதிவு செய்திருந்தார். அங்கே அவருடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

அரவிந்தரின் மாபெரும் காப்பியமான சாவித்ரியைப் பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். மில்டனின் ‘பேரடைஸ் லாஸ்டுக்கு’ (Paradise Lost) இணையான ஒரு பெருங் கவிதை. பேராசிரியர் நட்கர்னி அவர்களது தொடர் உரைகளை கேட்டு பிரமித்தேன், இன்புற்றேன். தினம் இரண்டு சிறப்புரைகள் என்று தொடர்ந்து பத்து நாளோ-பதினைந்து நாளோ நடைபெற்றது. நான் இரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததால் நான்கு சிறப்புரைகளை மட்டுமே கேட்க முடிந்தது. மறக்க முடியாத ஒரு அற்புத அனுபவம் அது.

மேலும் என்னை அவர் ஆரோவில்லுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அன்னையின் ஆலயத்தில் (Matri Mandir) தியானம் செய்தோம். மற்றுமொரு மறக்கமுடியாத அனுபவம் இது.

பெரிய இடைவெளிக்குப் பின் நண்பர் கிருஷ்ணன் அவர்களை சந்தித்தது, அதுவும் அவரது மணிவிழாவில் சந்தித்தது மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் பல நண்பர்களை அங்கே கண்டேன். அங்கே எடுத்த சில படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

நண்பர் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சகல நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Facts and Figures-61: "Antarctica losing 190,000,000,000 tons of ice per year!"

A news item in Harper’s Weekly (Harper’s Weekly Review, November 24, 2009) says that Antartica was now losing, hold your breath, 190,000,000,000 tons of ice per year! I am curious how scientists arrive at these mind-boggling figures.

Grateful thanks to Paul Ford and Harper’s Weekly.

Eyecatchers-143: "Global Warming Science is a Fraud?"

A collection of emails from leading climatologists was stolen by hackers and released online; climate-change skeptics said the emails demonstrated that global-warming science is a fraud, while the scientists said that that’s just what science looks like.

Courtesy: Weekly Review by Paul Ford, HARPER’S WEEKLY, November 24, 2009.

Grateful thanks to Paul Ford and Harper’s Weekly.

A Thought for Today-273:

Words, like Nature, half reveal
And half conceal the Soul within – Tennyson

Picture of the day-85:

Facts and Figures-61:

From an ad of CMAI in Dinamalar, Tamil daily, I find that India has crossed the landmark of 500 million telephones.

Sam Pitroda and Rajiv Gandhi, the architects of Indian Communication revolution come to mind. They deserve our gratitude.

Let us look for many more such achievements.

My Video Album-1: My 60th Birthday Celerbations

This video was taken by one of my relatives, Mr.Sivasankaran, during my 60th birthday celebrations. He has added some background music, a Tamil film song, and sent it to me by email. Then I posted it to YouTube and again uploading it here for the benefit of the visitors of my blog. This was a joyous occasion for me, my friends and relatives. We were always enjoying ourselves which you can see it for yourself.

Grateful thanks to Mr.Sivasankaran and YouTube.

A Thought for Today-272:

Gratitude is the memory of the heart – J.B.Massieu

Picture of the day-84:

Wayside Temples-37: "Sri Vazhiththunai Vinayagar Temple"

This small temple of Lord Vigneswara is in the Karaikudi Railway station premises, just outside the entrance. Passengers entering the station can pray the Lord for their safety and proceed. What with terrorist attacks and careless railway employees, journeys, including train journeys, are becoming hazardous and one definitely needs the protection of the Lord.

A Thought for Today-271:

Do all the good you can,
By all the means you can,
In all the ways you can,
In all the places you can,
At all the times you can,
To all the people you can,
As long as ever you can.

– John Wesley

Picture of the day-83:

Daily Reads-2: November 19, 2009

Complete Works of Swami Vivekananda – Volume VII

Though this book is in my Daily Reads collection, I find I am not actually read it daily – so many distractions, disturbances and demands on my time. What to do! However, today I could read it. I generally read only a page or two and savour what I have read.

From today’s reading, the following passage impressed me most and hence I am excerpting it here.

“The greatest sin is to think yourself weak. No one is greater: realise you are Brahman. … Stand up and say, I am the master, the master of all. We forge the chain, and we alone can break it.”

Wayside Temples-36: "Sri Selvavinayagar Temple"

Question and Answer-28: "What is discrimination?"

What is discrimination?

Discrimination is the reasoning by which one knows that God alone is real and all else is unreal. Real means eternal, and unreal means impermanent. He who has acquired discrimination knows that God is the only Substance and all else is non-existent. (The Gospel of Sri Ramakrishna).