Gems from Mother Teresa-3:

Joy is a net of love by which you can catch souls – Mother Teresa

Picture of the day-309:

A Thought for Today-486:

All successful people have a goal. No one can get anywhere unless he knows where he wants to go and what he wants to be or do – Norman Vincent Peale

My Photo Album-68: Karthik at the beach

நெல்லையப்பன் கவிதைகள்-78: இலக்கு

கருத்தரங்கில் கைகலப்பு.
தலைப்போ வள்ளுவம்.
காரணம் ஆய்வறிக்கை.
.
வள்ளுவன் திருக்குறளில்
அதிகம் பயன்படுத்திய சொல்
எதுவென்ற ஆய்வில்
அறிஞர் பெருமக்கள்
ஆளுக்கு ஒன்றை முன்மொழிய,
.
சொல்லுக்காக சொற்களால்
அடித்துக் கொண்டவர்கள்,
சொற்கள் தீர்ந்து போனதும்,
கைகளால் அடித்துக் கொள்ள,
.
கிழிந்தன சட்டைகள்,
பறந்தன புத்தகங்கள்,
மிதிபட்டது திருக்குறள்.

Gems from Mother Teresa-2:

Be faithful in small things because it is in them that your strength lies.

Gems from Gandhiji-22:

It is easy enough to be friendly to one’s friends. But to befriend the one who regards himself as your enemy is the quintessence of true religion. The other is mere business.

Picture of the day-308:

Kangaroo! 
Courtesy: Karthik, Australia

A Thought for Today-485:

It’s not enough to be busy, so are the ants. The question is, what are we busy about? – Thoreau

My Photo Album-67: Karthik under the Apple Tree

Karthik is my nephew.  He has been named after my father, his grandfather.  Had my dad been alive today, he would have been very happy to see this picture and would feel proud to know that his grandson is doing well in Australia.  The picture is fascinating to me in another respect.  Apple is something I see only in fruit-shops or in the cart of road-side vendors.  Here in the picture there are so many apples, looking so good, near the ground and easy to pluck.  Very nice indeed and so I have included it in my album.

நெல்லையப்பன் கவிதைகள்-77: படிப்பினை

பிள்ளையாரப்பா …
புத்தகம் இல்லாம
எவ்வளவு நல்லாருக்கு!
இது இப்படியே இருந்தா
எவ்வளவு விசயம் கத்துக்கலாம்!


எங்க வாத்தியாருக்கு
என்ன வெல்லாம் தெரியுமுன்னு
இப்பத்தான் தெரியுது!


இதையெல்லாம்
ஏன் சொல்லித்தரல
இத்தனை நாளா?


சாதாவோ, சமச்சீரோ
இந்த ஒரு மாதம்
நாங்க படிச்சது
எந்த புத்தகத்திலுமில்ல.


புத்தகம் வந்தா
எங்க சந்தோசமெல்லாம்
காணாத பூடும்.


இப்ப நான் கத்துக்கிட்டது
புத்தகத்திற்கு வெளியேயும்
நிறைய படிக்கணும்.

Picture of the day-307:

A Thought for Today-484:

A man is great by deeds, not by birth – Chanakya

My Photo Album-66: Best wishes from Maha

Maha conveys her best wishes to all!

A Thought for Today-483:

Every great institution is the lengthened shadow of a single man. His character determines the character of the organization – Emerson

Self-Improvement-89: "Jack Canfield explains: How To Accelerate Your End Result"

Grateful thanks to Jack Canfield, DreamBigC and YouTube.

My Photo Album-65: A wide-eyed Maha

A Thought for Today-482:

Remember that not getting what you want is sometimes a wonderful stroke of luck – Dalai Lama

நெல்லையப்பன் கவிதைகள்-76: "விடியல்"

மாலையா
மலர்ச்சரமா
மலர் வளையமா
அர்ச்சனை உதிரியா
உதிரும் சருகா –

சேருமிடம்
எதுவானாலும்
மலரின் காத்திருத்தல்
ஓரிரு நாட்களே!
மலரினும் மெல்லிய
மங்கையர்க்கு?

மரணத்தைப் போலவே
மணநாளும் தெரியாமல்
எத்தனை நாள் காத்திருக்க?
வருமா, வராதா?

இத்தனை வயதிற்குள்
காத்திருக்கும் கன்னியர்க்கு
மணம் முடிக்க வேண்டுமென
அவசரச் சட்டம் வராதா?
அரசே நடத்த முடியாதா?

அவசரம் எனக்கில்லை,
இளைய மகள் நான்.
அக்காக்கள் இருவர்
அவர்களுக்கு விடியட்டும்!

மனதில் பதிந்தவை-14: குமுதம் தீராநதி, ஜூலை 2011

குமுதம் தீராநதி, ஜூலை 2011, விலை ரூ.15/- 
—————————————————————–

மேஜை நிறைய இதழ்கள்.  நிறைய படிக்கவேண்டியியது பாக்கி இருக்கிறது.  ஏகப்பட்ட இடையூறுகள், குறுக்கீடுகள்; அப்புறம் இயலாமை, உடற்சோர்வு, மனச்சோர்வு.  எல்லாம் தள்ளிக்கொண்டே போகிறதே, காலம் ஓடிக் கொண்டேயிருக்கிறதே என்ற கவலை.  என் செய்வது?


தீராநதி வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ வாங்கியிருக்கிறேன்.  ஒவ்வொருமுறையும் இது நமக்கல்ல, விட்டுவிடலாம் என்றே தோன்றும்.  இருப்பினும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் வாஸந்தி, செயப்பிரகாசம் இவர்கள் பெயரைப் பார்க்கும்போது வாங்கலாம் என்று மறுபடியும் தொடர்கிறேன். தற்போது இந்திரன் அவர்கள் பெயரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.  அவரது எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இந்த இதழைப் பொறுத்தவரை, ஐந்து கட்டுரைத் தொடர்கள், மூன்று கட்டுரைகள், ஐவரின்  கவிதைகள்,  ஒரு சிறுகதை, ஒரு புத்தக விமர்சனம், ஒரு நேர்காணல் என்று நிறைய இருந்தாலும், எனக்குப் பிடித்தவை குறைவே. முதலிடம், ஈழ எழுத்தாளர்  உமா வரதராஜன் அவர்களது நேர்காணலுக்கே. சந்தித்தவர் பவுத்த அய்யனார். பதினோரு சுவையான பக்கங்கள்!  மேலோட்டமாக சில இதழ்களில் அரைப் பக்கம், ஒரு பக்கம் நேர்காணல் என்ற பெயரில் வரும்போது எரிச்சலாக இருக்கும். அதைப்படித்து பெரிதாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாது.  ஆழமான இது போன்ற நேர்காணல்கள் அந்த எழுத்தாளரையே நேரில் சந்தித்துப் பேசிப் பழகுவது போன்ற ஒரு உணர்வைத் தருகின்றன.  (நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் ‘இனிய உதயம்’ மாத இதழை இதற்காகவே நான் தொடர்ந்து வாங்கிவருகிறேன்.  என்ன காரணத்தாலோ ‘இனிய உதயம்’ பற்றி பதிவுகள் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன.  விரைவில் பதிவேன்.)
தன் தாத்தா(உடையப்பா), தந்தை(மாணிக்கம்) ஆகியோரின் பெயரிலிருந்து முதல் எழுத்தை தன் பெயருடன் இணைத்து, உமா வரதராஜன் என்ற பெயரில் எழுதிவரும் இவர் பிறந்தது கிழக்கிலங்கையிலுள்ள பாண்டியிருப்பு என்ற கிராமத்தில், 1956-ம் வருடத்தில். சிற்றிதழ் ஆசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், சிறுகதை எழுத்தாளர் (உள்மன யாத்திரை), நாவலாசிரியர் (மூன்றாம் சிலுவை), கவிதை விமர்சகர், பத்தி எழுத்தாளர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு. இலக்கியத்தில் பிரதேசவாதம், இனவாதம், தவாதம் என்பதற்கு அப்பாற்பட்டவராக தன்னை இவர் அடையாளப்-படுத்தியிருப்பது இவர்மீது எனக்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நேர்காணலின் மூலம் ஈழத்தின் மற்ற படைப்பாளிகளைப்  பற்றியும் (நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், நுஃமான், மருதூர்க்கொத்தன், அ.யேசுராசா போன்ற பலர்)  அறிந்து கொண்டேன். 

அதிலும் குறிப்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒரு கவியரங்கில், சண்முகம் சிவலிங்கம் அவர்கள் துணிவுடன் சொன்ன ஒரு கருத்து என் மனதில் ஆழமாகப் பதிந்தது: “தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு பின்னர் தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசுங்கள். உண்மையான பிரச்சினைகளைக் காண மறுத்து தீக்கோழிகளைப்  போல மண்ணுக்குள் தலையை மறைக்காதீர்கள்.”
சுவையான, சிந்தனையைத் தூண்டும் பல தகவல்கள் இந்த நேர்காணலில் கண்டேன்.

அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்தது இந்திரன் அவர்களின் தொடரில் இந்த மாதம் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அலெக்ஸ் காபஸ் பற்றி எழுதியிருந்தது.



மூன்றாவதாக, பா.செயப்பிரகாசம் அவர்களின், “சட்டாம்பிள்ளைகளும் சமச்சீர் கல்வியும்”.  இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நுட்பமான உண்மைகளையும், அவை எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பதுவும்  இதைப் படித்த பின்னரே அறிந்தேன். “கல்வி என்பது எழுத்துக்களைக் கற்பது அல்ல. எழுத்துக்களின் வழி பயணம் செய்து அறிவைப் பெறுவது” என்பது அவரது கருத்து. (என்னைப் பொறுத்தவரை முழு மனிதர்களை, பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கவும், மேன்மையான சிந்தனைகளை மனதில் விதைத்து, அதன்படி வாழக் கற்றுக் கொடுப்பதும்தான் உண்மையான கல்வி.  வெறும் அறிவைத் தருவது, திறமைகளை வளர்க்க வழிகாட்டுவது மட்டுமல்ல  கல்வியின் நோக்கம். இன்றைய சமுதாயத்தில் நாம் நிறைய அறிவாளிகளைத், திறமைசாலிகளைப் பார்க்கிறோம்;  ஆனால் அவர்களில் பலரும் சுயநலத்திற்காக தங்கள் அறிவை பயன்படுத்தி, எதுவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்-வாழலாம் என்று இருப்பதால்தான் இன்றைய சமுதாயத்தில் பல சுரண்டல்கள், அநியாயங்கள், அராஜகங்கள், அக்கிரமங்கள் மலிந்திருக்கின்றன. சுவாமி விவேகானந்தர் கூறிய மனிதர்களை உருவாக்கும் கல்வியே  (Man-making Education) இன்றையத் தேவை.)


சிந்திக்க வேண்டிய அவரது கேள்விகள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்: “… பொதுக் கல்வியை அரசே வழங்க வேண்டுமென்ற அரசியல் யாப்பின் கோட்பாட்டிற்கு எதிராக தனியார் கல்வியை எவ்வாறு அனுமதித்தார்கள்?  அரசியல் அமைப்புச்சட்ட அத்துமீறலைச் செய்ததோடு அல்லாமல், கல்வி வழங்கலில் நீங்களும் அரசியல் சட்டத்தைக் காலில் போட்டு மிதியுங்கள் என்று தனியார்களையும் தூண்டி அவமதிக்கச் செய்தது சரியா?… அறுபது ஆண்டுகள் கழித்து சமச்சீர் கல்வி என்று நாம் பேசுவதும், போராடுவதும், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என்று இழுத்துக்கொண்டு போவதும், அரசியல் சட்டத்தைக் கேலி செய்வதாக இல்லையா….”

அடுத்து, ரவிக்குமாரின் சிறுகதை, “கடல்கிணறு”.  இக்கதையில் சில பகுதிகளை நான் மிகவும் ரசித்தேன். அவற்றில் சில: “…நிலாவை மேகம் தின்றுகொண்டிருந்தது…. யாரோ காற்றைச் சுருட்டி எடுத்துச் சென்றுவிட்டதுபோல் இறுக்கம்…. நான் எப்போதும் தனிமையோடே சிநேகமாக இருந்தேன்… வீட்டிலிருந்து கிளம்பும்போது தனிமையும் என்னோடு பள்ளிக்குக் கிளம்பிவிடும். …  கடலைப் பார்ப்பது சுவாரஸ்யமான விஷயம்தான். கடல் என் அம்மாவைப் போல எனக்குத் தோன்றும். அதில் இருக்கும் மீன்களை என்னைப்போல் உருவகித்துக் கொள்வேன். அவை அம்மாவை விட்டுப் பிரிவதில்லை. பிரிந்தால் அவற்றுக்கு மரணம் நிச்சயம். நிலத்தோடு ஓயாமல் உரையாடிக் கொண்டிருக்கும் கடலுக்கு சலிப்பே ஏற்படாதா? பின்வாங்கிப் போவதும், திரும்ப வந்து பேசுவதுமான இந்தப் பழக்கத்தை மனிதர்களிடமிருந்து கடல் கற்றுக்கொண்டதா அல்லது கடலிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொண்டார்களா? நிலத்துக்குக் கடல் தரும் அன்பளிப்புதான் மீன்களா?….”


அடுத்து, வாசந்தியின் தொடர் கட்டுரையான ‘பெற்றதும் இழந்ததும்’.  இதில் உலக வங்கியின் தலைவராக இருந்து, பெண் சபலத்தால் அவமானப்பட்டு, பதவி இழந்து, பிரஞ்சு நாட்டின் அதிபராகும் வாய்ப்பை இழந்து நிற்கும் கோடீஸ்வரரான டாமினிக் ஸ்ட்ராஸ் கான் பற்றியும், பெண்களை வெறும் போகப் பொருளாகவும், அவர்கள் தங்களை விட எல்லாவிதத்திலும் தாழ்ந்தவர்கள் என்றும், அவர்களைச் சமமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆணாதிக்க மனப்பான்மையையும் சாடியிருப்பது ஆணினம் சிந்திக்க வேண்டிய ஒன்று.


இறுதியாக, தமிழச்சி தங்கப்பாண்டியனின் கவிதை.  நல்ல கவிதை.  ஒவ்வொரு வரியும் என் தந்தையாரை நினைக்க வைத்தது.  பொதுவாக, எனக்குக் கவிதையில் ஈடுபாடு குறைவு; தெளிவாக, எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் இல்லையென்றால் பெரும்பாலும் நான் விட்டுவிடுவேன்.  இழப்பு எனதுதான் என்பது எனக்குப் புரிகிறது.  இருப்பினும் என் செய்வது?


மொத்தத்தில் இந்த இதழ் எனக்கு நிறைவைத் தந்தது. 


நன்றி: குமுதம் தீராநதி 

நெல்லையப்பன் கவிதைகள்-75: "விழியிழந்தோர்"

முக்கண்ணன்
இவர்கள் மீது
நெற்றிக்கண்
ஏன் திறந்தான்?
காக்கும் இமையே
கண் திருடலாமா?

பன்னிரு  விழிகளிலே

பரிவோடு ஒரு விழியால்
பார்த்திடவே வேலவனும்
ஏன் மறந்திட்டான்?


கண்ணாத்தாள்
ஏன் கைவிட்டாள்?
மீன் கண்ணாள்
ஏன் மறந்திட்டாள்?


ஆயிரம்
கண்ணுடையாள்
அலட்சியமாய்
விட்டதென்னே?


விரல்களை
விழிகளாக்கி
காதுகளால்
கற்கும் இவர்கள்
மூன்று கால்களால்
நடந்தாலும்
சொந்தக்காலில்
நிற்ப்பவர்கள்.


இருட்டு ஒரு
பொருட்டில்லை
இறைவன் மீதும்
வெறுப்பில்லை


எண்ணும் எழுத்தும்
கண் எனத் தெளிந்ததால்
கல்வி எனும் வெளிச்சம்
கைகொடுக்கும் இறுதிவரை.


வெறும் ஆறு புள்ளிகளால்
எதனையும் படிக்கலாம்
கெல்லரும்,பிரைலரும்
வெற்றி பெற வில்லையா?


அன்பின் மிகுதியினால்
வீட்டினுள் சிறை வைத்து
எதிர் காலத்தை
இருட்டாக்காமல்


பர்வையற்ற சிறார்களை
சிறப்புப் பள்ளியில் சேர்த்து
கல்விக்கண் கொடுப்போம்
கண்மணிகள் வாழட்டும்!

My Photo Album-64: Maha with her dad

A Thought for Today-481:

We are what we repeatedly do. Excellence, then, is not an act, but a habit – Aristotle

My Photo Album-63:

Cute!

A Thought for Today-480:

In forming a bridge between body and mind, dreams may be used as a springboard from which man can leap to new realms of experience lying outside his normal state of consciousness – Ann Faraday

My Photo Album-62: Vinod with his cousin, Akhilesh

A Thought for Today-479:

All serious daring starts from within – Harriet Beecher Stowe

My Photo Album-61: Maha with her mamu, Vinod

A Thought for Today-478:

The doors of wisdom are never shut – Benjamin Franklin

மனதில் பதிந்தவை-13: ஆனந்த விகடன், ஆகஸ்ட் 10, 2011

ஆனந்த விகடன், ஆகஸ்ட் 10, 2011   

நம்பர் ஒன் தமிழ் வார இதழ்

————————————————————-

முதலில், ப.திருமாவேலனின், “ரியல் ஹீரோஸ்”.  

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, டிராஃபிக் ராமசாமி, காவல்துறை அதிகாரி கண்ணப்பன், ஆஸ்ரா கார்க், தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உமாசங்கர், சகாயம் பற்றி.

என்னைப் பொறுத்தவரையில், டாக்டர் சுவாமியைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன: கோமாளி, குழப்பவாதி, அமெரிக்க சி.ஐ.ஏ.ஏஜென்ட். இப்படிப் பல. இவற்றில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரக் காரணமாய் இருந்தவர்; இவர் கிளப்பியிருக்காவிடில்  சில ஊழல்கள் முற்றிலுமாக மறைக்கப் பட்டிருக்கலாம் என்று கூறலாம். எனவே நிச்சயமாக அவர் ஒரு ஹீரோதான். 

அதுபோல் திரு ராமசாமி பொதுநல வழக்குகள் மூலம் பல அக்கிரமங்களை, அராஜகங்களை எதிர்த்துப் போராடியவர். அதனால் பல தொல்லைகளுக்கு ஆளானவர்.  சுயநலம் இல்லாமால் இப்படிப் பொது நலத்திற்காகப்  போராடிய இவரும் ஒரு ஹீரோதான். 

அரசியல்வாதிகளின் உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் கடமையாற்றிய காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்களே; அவர்களையும் ஹீரோ என்று பாராட்டலாம்.

அடுத்து, டி.எல்.சஞ்ஜீவ்குமாரின்  , “பொருள்: சென்னை”. 

வட சென்னையைப் பற்றிய தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன.  இதெற்கெல்லாம் விடிவு காலம் எப்போது என்ற கேள்விதான் என் மனதில் நிற்கிறது. காலம்தான் பதில் சொல்லவேண்டும். அதிலிருந்து:


“திருவொற்றியூர் கன்டெய்னர் கார்ப்பரேஷனில் மறைமுகமாக நடக்கும் கடத்தல், திருட்டு, மாமூல் எனத் தினமும் கொடிகளில் பணம் புரளும். கேடி, கோடி, வறுமை, வயிறு ஒட்டிய வாழ்க்கை என முற்று முரணான வாழ்வியலே வாடா சென்னையின் அடையாளம்….

அரசு யந்திரம் என்கிற ஒன்று அந்தப் பக்கம் இயங்குகிறதா என்பதே கேள்வி. அந்த அளவுக்குப் பாரா முகமும், பகீர் ரகமுமாக வன்மம் காட்டுகிறது வடசென்னை!…” 

அடுத்து, “விகடன் வரவேற்பறை”யிலிருந்து:  
ஆர்,சூடாமணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த முப்பத்தாறு சிறுகதைகளின் தொகுப்பு, “நாகலிங்க மரம்“.  பக்கம்: 328. விலை: ரூ.230/- வெளியீடு: “அடையாளம்”, புத்தாநத்தம். இதன் பின் இணைப்பாக சூடாமணியின் சிநேகிதி பாரதி மற்றும் எழுத்தாளர் அம்பை ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

“இணையம் அப்டேட்ஸ் ” –
“சிலிக்கான் பள்ளத்தாக்கின் மாற்றங்களைப் புதுப் புது டெக்னிகல் வார்த்தைகள் சொல்லிப் புரியவைக்கிறார்கள்.” அனைவருக்கும் பயனுள்ள பல தகவல்கள்.

“வெளிநாடு போவோருக்கு”: 
  
“வேலை தேடி வெளிநாடு செல்வோருக்கு பயனுள்ள தளம்.

அடுத்து, ந.வினோத்குமாரின், “பாஸ்கோவின் இரும்புப் பிடி!” நம் நாட்டு இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் வெளிநாட்டார் நம் ஆட்சியாளர்களின் உதவியுடன் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாஸ்கோ.  இக்கட்டுரையிலிருந்து:

“… இடிஷாவில் உள்ள ஜகத் சிங் பூர் மாவட்டத்தில் பாரதீப் துறைமுகத்திலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் அமைய இருக்கிறது இந்த ‘பாஸ்கோ’ நிறுவனம். … “போஹாங் ஸ்டீல் கம்பெனி” என்பதன் சுருக்கம்தான் பாஸ்கோ.  முதலில் தென் கோரிய அரசிடம் இருந்த இந்த நிறுவனம் தற்போது தனியாரிடம்!…”

உலகிலேயே மிகச் சிறந்த இரும்புக் கனிமம் ஓடிஷாவின் சுந்தர்கர் மாவட்டத்திலுள்ள கண்டாதர் சுரங்கத்தில் நிறைந்திருக்கிறது. இங்கே இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் அந்நியமுதலீட்டுடன் (55,000 ௦௦௦கோடி) தொடங்கப்படும் திட்டம் இது! இருபது வருடங்களுக்குள் கனிமங்களை முழுதாகச் சுரண்டி எடுத்துவிடவேண்டும் என்பது இவர்களின் நோக்கம். ஒரு மெட்ரிக் டன் கனிமத்திற்கு ஓடிஸா அரசிற்கு இவர்கள் கொடுப்பது வெறும் அறுபது சென்ட்! வெளிச்சந்தையில் இதன் விலை சுமார் இருநூறு டாலர்!! இதைச் செறிவூட்டி விற்றால் இரண்டாயிரம் டாலர்!!! உயர்தரக் கனிமமாக மாற்றி விற்றால் சுமார் ஐயாயிரம் டாலர்!!!!  பன்னிரண்டு மில்லியன் டாலர் முதலீட்டில் இருநூறு பில்லியன் டாலரைக் கொள்ளைகொண்டு போகும் திட்டமிது.  சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாது, இப்பகுதியிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கிறது.  வனப் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை ஒழுங்கமைவு சட்டம் போன்ற பல சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.  எதிர்த்துப் போராடும் மக்களின் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன (சராசரியாக, ஒவ்வொரு ஆணின் மீதும் இருநூறு வழக்குகள்!).

அடுத்து, ஷங்கர் ராமசுப்பிரமணியனின், “நல்ல தங்காள்” என்கிற கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்து, அன்டன் பிரகாஷின், “வருங்காலத் தொழில் நுட்பம்”. இதிலிருந்து: “… சின்ன விஷயங்களில் புதுமையைப் புகுத்தி அதை TALK OF THE TOWN ஆக மாற்றிவிடலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணம்: iWatch.
(http://www.iwatchz.com /).  ஐ-பாட் நானோ என்பது ஆப்பிள் ஐ-பாட் குடும்பத்தின் ஒரு உறுப்பினர். சதுர வடிவில் இருக்கும் இந்த இசைப் பேழை சாதனத்தில், மிகவும் அடிப்படையான மென்பொருட்கள் சிலவும் உண்டு. உதாரணத்துக்கு, புகைப்படங்களைச் சேமித்துப் பார்க்க முடிகிற வசதி. கடிகார மென்பொருளும் உண்டு.  அந்த மென்பொருளை இயக்கினால், ஐ-பாட் நானோ பார்ப்பதற்கு கைக்கடிகாரம்போல் இருக்கும் என்பதைப் பார்த்து அதற்கு STRAP ஒன்றைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இதை வாங்கி, ஐ-பாட் நானோவை அதில் செருகினால் போதும், கைக்கடிகாரம் தயார்!…”

அடுத்து, வாலியின் தொடர் கட்டுரை, “நினைவு நாடாக்களின்” நாற்பத்திரெண்டாவது பகுதியிலிருந்து இசைஞானி இளையராஜா பற்றி: “…அவர் – கண்மூடித்தனமாய்க் கை கூப்பிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஆண்மீகவாதியல்ல. தன்னுள், தன்னைத் தேடி, அந்தத் ‘தன்’னிலேயே, தன்னைக் கரைத்துக் கொண்ட சித்தர் அவர்!  ஒரு நூற்றாண்டுக் காலம் அருள் பிலிற்றி நின்ற காஞ்சிப் பெரியவாளால், பெரிதும் போற்றப்பட்டவர் இளையராஜா…”

அடுத்து, எஸ்.கலீல்ராஜாவின், “மரணம் தப்பினால் மரணம்”. அதிலிருந்து:
“…கடல், காற்று, நிலம் என்று மூன்றிலும் அதிவேகமாகச் செயல்படும் அமெரிக்கக் கடற்படையின் சிறப்பு அதிரடிப்படைதான் – சீல்.  Sea, Air, Land ஆகியவற்றின் சுருக்கம்தான் SEAL.  இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட அனுபவங்களால், எதிரி-நண்பன் எனப் பாரபட்சம் காட்டாமல் அனைத்து நாடுகளுக்குள்ளும் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் குறித்து யோசித்தது அமெரிக்கா. அதைத் தொடர்ந்து, வியட்நாம் போரின்போது உருவாக்கப்பட்ட அமைப்புதான் சீல்.  மூக்கை நுழைப்பது என்பது அடுத்த நாடுகளின் நிலவரங்களைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல. படுகொலை, சதித் திட்டங்கள் செய்வதன் மூலம், அரசியல் நிலைமைகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பதும் கூட. பிற நாடுகளின் எல்லைப்புறத்தில் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்துவது, எதிரி நட்டு முக்கியத் தலைகளைக் காலி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீல், பின்னாட்களில் தீவிரவாதிகளைக் கொல்வது, போதைக் கடத்தல்காரர்களைப் போட்டுத்தள்ளுவது, பணயக் கைதிகளை விடுவிப்பது, விமானக் கடத்தலைத் தடுப்பது எனப் பல்வேறு பணிகளுக்காக விரிவாக்கப்பட்டது. உலகின் எந்த நாட்டு அதிரடிப் படைகளையும்விட, சீல் வீரர்களுக்கு மிக மிகக் கடினமான பயிற்சி கொடுக்கப்படும்….ஒசாமா என்கவுன்டருக்காக அதிகம் சத்தம் வராதபடி ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை வடிவமைத்தார்கள். ஒன்றுக்கு மூன்று ஹெலிகாப்டர்களை அனுப்பிவைத்தார்கள்.  பாகிஸ்தான் ரேடாரில் சிக்காதபடி மிகத் தாழ்வாகப் பறந்தார்கள். ஒசாமா வீட்டு மொட்டை மாடியில் இறங்கினார்கள். இருபது நிமிடங்களில் காரியத்தை முடித்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் சுதாரித்து, போர் விமானங்களை அனுப்பியபோது, அங்கே யாரும் இல்லை….”

அடுத்து, சார்லஸின், “ரெபேக்கா புரூக்ஸ்”.  
‘நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு’, ‘தி சன்’  ஆகிய  பத்திரிக்கையின் ஆசிரியராகவும், அதன் பின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியவர். இந்தக் கட்டுரையிலிருந்து: 

“…ரெபக்கா புரூக்ஸ்… இங்கிலாந்து அரசியலில் புயல் கிளப்பி இருக்கும் அதிரடி மீடியா பெண்மணி.  இங்கிலாந்து அரசியலை அதிரவைத்த, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தின் முக்கியப் புள்ளி இவர்தான். ரூபர்ட் முர்டோக்கின் மீடியா பேரரசில் நுழைந்து, சாம்ராஜ்யத்தின் லகானை இறுக்கிப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி, இன்று நாற்பத்தி மூன்று வயதில் சிறைவாசலையும் தொட்டு இருக்கும் ரெபக்கா புரூக்ஸ் கடந்து வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது!…  தனி மனுஷியாக மீடியாவில் நுழைந்து, அசுர பலம் காட்டினாலும்… தவறான அணுகுமுறையால் இப்போது தலைகுனிந்து நிற்கிறார் ரெபக்கா புரூக்ஸ்!”

கவின்மலரின், “கன்னித்தீவு கதையா கல்வி?”.  சமச்சீர் கல்விப் பிரச்சினை இன்னும் இழுத்துக் கொண்டே போகிறது.  பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் முடியப் போகிறது.  இன்னும் மாணவர்கள் கைக்கு புத்தகங்கள் போய்ச்சேர்ந்த பாடில்லை. இக்கட்டுரையிலிருந்து:

“… ‘பாடத் திட்டம் பொது.  ஆனால், பாடப் புத்தகம் பொது கிடையாது. அப்படியென்றால், அரசுப் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும், மெட்ரிக் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும் வைக்க அரசே வழிவகுக்குத் கொடுக்கிறது. எப்படியோ ஒருவகையில் மாணவர்களை இரண்டு வகையினராகப் பிரித்துவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது’ என்கிறார் அ.மார்க்ஸ்’….” 

அடுத்து, சி.கார்த்திகேயனின், “தி ஸ்பிரிட் ஒப் மியூசிக்”.  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி  நஸ் ரீன் முன்னி கபூர் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகள் இக்கட்டுரையில்.    இந்த குறும்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளருடன் கடந்த நான்கு வருடங்களாக ரஹ்மான் அவ்வப்போது உரையாற்றியதன் தொகுப்பே இந்தப் புத்தகம்.

அடுத்து. OP-ED  பக்கத்திலிருந்து, இலங்கையில் நடந்த தமிழ் இனப் படுகொலை பற்றி சந்திரிகா குமாரதுங்கே கூறியது: “லண்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, தமிழர்கள் கொல்லப்படும் காட்சிகளைக் கண்டு என் இருபத்தெட்டு வயது மகன், தான் ஒரு சிங்களவன் என்று சொல்ல வெட்கப்படுவதாக என்னிடம் அழுதபடி கூறினான். இதே கருத்தை என் மகளும் தெரிவித்தாள்!” இதற்குமேல் என்ன வேண்டும்?


அடுத்து, விகடனுடன் இனிப்பான, “என் விகடனிலிருந்து”: 

நாஞ்சில் சம்பத், நாஞ்சில் நாடன் – நாகர்கோவிலைச் சேர்ந்த பல வி.ஐ.பிக்களின் பெயரோடு ஒட்டியே இருக்கும் ‘நாஞ்சில்’ பட்டம். நாஞ்சில் என்றால் ‘கலப்பை’ என்று அர்த்தம். தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு குமரி மாவட்டம் இருந்த காலகட்டத்தில் இங்கிருந்துதான் சமஸ்தானம் முழுவதற்கும் நெல் சென்றது.  அந்த அளவுக்கு நெல் சாகுபடியில் கொடிகட்டிப் பறந்த பகுதி இது.  ஆனால், இன்று விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டதால், அரிசி உற்பத்தியில் உள்ளூர் தேவைக்கே தடுமாறுகிறது நாஞ்சில் நாடு!”

“என் ஊர்” பகுதியில் எழுத்தாளர்  ம.காமுத்துரை தன் ஊர் அல்லிநகரம் பற்றி எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி இதிலிருந்து: “…இதுவரை பதினான்கு தொழில்கள் வரை மேற்கொண்ட இவர், கடந்த எட்டு வருடங்களாக அல்லிநகரத்தில் ஒரு வாடகைப் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். … இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கும் காமுத்துரை, தனது ஒன்பதாவது சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக, அவர் நேசிக்கும் எழுத்தாளர் பூமணியின் பெயரையே சூட்டி இருக்கிறார்.  தற்போது இவர் எழுதி முடித்து விரைவில் வெளியாக இருக்கும் நாவலின் தலைப்பு, “ஆயா!”.