ஆன்மீக சிந்தனை-13:

* எதிலும் எப்போதும் கவனமாக இருங்கள்.
* உங்களுக்குள் ஒளியைத் தேடுங்கள்.
* ஒளி உங்கள் உள்ளிருந்து சுடர் விடுமாறு வாழுங்கள்.
* உங்களுக்கு நல்லது என்று தோன்றுபவைக்காக பாடுபடுங்கள்.
* நான் உங்களுக்கு பாதையைக் காட்ட மட்டுமே முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம் எவ்வளவு தூரம் பயணம் செல்லமுடியுமென முடிவு செய்யவேண்டும். உங்களுக்குள்ளே உறையும் ஒளியின் மூலம் நீங்களே வழி நடத்திக் கொள்ளுங்கள்.


நன்றி: மு.சம்சியபானு, 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புல்லங்குடி
+ தினமலர், மதுரை, செப்டம்பர் 22, 2008 (மாணவர் மலர்)

ஆன்மீக சிந்தனை-12:

எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாக வழிபடுங்கள். சாதாரண நீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்று அவசியமில்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

திருமுருக கிருபானந்த வாரியார்

நன்றி: தினமலர், மதுரை, செப்டம்பர் 9, 2008 (“ஆன்மிகம் அறிவோமா”)