வீடீயோ கவிதைகள்-6:

மகாகவியின் நினைவு நாளான இன்று காலை முதல் தொடர்ந்து மகாகவியின் பாடல்களை டிவியில் கண்டு, கேட்டு மகிழ்ந்தேன். யூடூபிலும் பல பாடல்களைக் கேட்டு இன்புற்றேன். கவிப்பேரரசின்கவிராஜன் கதையைப்படித்துச் சுவைத்தேன். தற்போது, மகாகவியின்செந்தமிழ் நாடென்னும் போதினிலேஎன்ற அவரது பாடலை பதிவு செய்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி மகிழ்கின்றேன்.

நன்றி: கார்த்திக்1947 & YouTube.

பாரதி கவிதைகள்-21: "ஞான பானு"

திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்
மருவுபல் கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபானு.

கவலைகள், சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்
அவலம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை அச்சம்
இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.
நலமுறு ஞானபானு நண்ணுக; தொலைக பேய்கள்

அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்.
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே, கூடிவாழ்வார் மனிதர் என்றிசைக்கும் வேதம்

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே
எண்ணிய வண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்த முகத்தினோடும்
நண்ணிடும் ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்.

பாரதி கவிதைகள்-20: "கண்ணபெருமானே"

காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானேநீ
கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே
நோயிலே படுப்பதென்ன கண்ண பெருமானேநீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே
காற்றிலே குளிர்ந்ததென்ன கண்ண பெருமானேநீ
கனலிலே சுடுவதென்ன கண்ண பெருமானே
சேற்றிலே குழம்பலென்ன கண்ண பெருமானேநீ
திக்கிலே தெளிந்ததென்ன கண்ண பெருமானே
ஏற்றி நின்னைத் தொழுவதென்ன கண்ண பெருமானேநீ
எளியர் தம்மைக் காப்பதென்ன கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்ன கண்ண பெருமானேநீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்ன கண்ண பெருமானே.

பாரதி கவிதைகள்-19: "சென்றது மீளாது"

சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமைஎலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

பாரதி கவிதைகள்-18: "அறிவே தெய்வம்"

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்
பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாம்
எனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனை போற்றி
மயங்கும் மதியிலிகாள்
எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம்
என்றோதி அறியீரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ? – பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை அழிவீரோ?

வேடம் பல்கோடியோர் உண்மைக்கு உளவென்று
வேதம் புகன்றிடும்ஆங்கோர்
வேடத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அவ்
வேதம் அறியாதே.

நாமம் பல்கோடியோர் உண்மைக்கு உளவென்று
நான்மறை கூறிடுமேஆங்கோர்
நாமத்தை நீர் உண்மையென்று கொள்வீரென்று அந்
நான்மறை கண்டிலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமேஉப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?

உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி
ஒளிந்திடும் ஆன்மாவேஇங்கு
கொள்ளற் கரிய பிரமமென்றே மறை
கூவுதல் கேளீரோ?

மெல்லப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரமமுள்ளது உண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்என்றும்
ஒன்று பிரமமுள்ளது உண்மை அஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-1: "மகாகவியின் "நிற்பதுவே, நடப்பதுவே"

இப்பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சில் ஒரு இனம்புரியாத வேதனை. மகாகவி வாழ்வில் அனுபவித்த துன்பமெல்லாம் மனதில் தோன்றி மறையும். என்னால் மறக்க முடியாத பாடல் இது என்பது மட்டுமல்ல, பலராலும் மறக்க முடியாத பாடல், கண் கலங்க வைத்த பாடல் இது.

மகாகவிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாடலை உயிர்ப்போடு பாடிய ஹரீஷ் ராகவேந்ரா, உணர்வு பூர்வமாக இசையமைத்த இசைஞானி இளையராஜா, இயக்குனர் ஞானசேகரன், யூட்யூபில் கொண்டுதந்தஅர்சராமற்றும் யூட்யூப் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளும்

பாரதி கவிதைகள்-16: "நான்"

வானிற் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணிற் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலும் நான்

விண்ணிற் எரிகின்ற மீனெலாம் நான்
வெட்டவெளியின் விரிவெலாம் நான்
மண்ணிற் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்

கம்பன் இசைத்த கவியெலாம் நான்
காருகர் தீட்டும் முருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழினகர் கோபுரம் யாவுமே நான்

இன்னிசை மாதர் இசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொறையரும் துன்பப் புணர்ப்பெலாம் நான்

மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்ட நற்சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர் வானின் செல்லுவோன் நான்
ஆனா பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற்சோதி நான் .

பாரதி கவிதைகள்-15: "சங்கு"

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்தமனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திடநாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்!
பொய்யுறு மாயைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திறுப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே,
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர் களாமென்றிங் கூதேடா சங்கம்.

பாரதி கவிதைகள்-14: "ஆத்ம ஜெயம்"

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்படலாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளும் முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? – அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!
என்ன வரங்கள்! பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?

பாரதி கவிதைகள்-13: "ஒளியும் இருளும்"

வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்றன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய
சோதி என்னும் பெருங்கடல் சோதிச்
சூறை மாசறு சோதி யனந்தம்
சோதி என்னும் நிரைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்
சோதி என்றதோர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாமயங்கிநல் லின்புறுஞ் சோதி
தாரணி முற்றும் ததும்பியிருப்ப
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சந் தியங்குவ தென்னே!
நீர்ச்சு னைக்கணம் மின்னுற்றிலக
நெடிய குன்றம் நகைத்தொழில் கொள்ள
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல் லின்பக் கருவாம்
வேர்ச்சுடர் பரமாண் பொருள் கேட்டும்
மேளிவோர் நெஞ்சிடை மேவுதல் என்னே!

பாரதி கவிதைகள்-12:

மேன்மைப் படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே
பயத்தால் ஏதும் பயனில்லை;
யான் முன் உரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி முறை சொல்வேன்,
ஆன்மாவான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே.

பாரதி கவிதைகள்-11:

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெலாம் நான்
காற்றுப் புனலும் கடலுமே நான்.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியி னுள்ளே உயிரெலாம் நான்.

கம்பனி சைத்த கவியெலாம் நான்
காருநர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொயையிருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரக் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினான் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டபல சக்திக் கணமெலாம் நான்
காரண மாகிக்க கதித்துனோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருட்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதியே நான்.

பாரதி கவிதைகள்-11:

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெலாம் நான்
காற்றுப் புனலும் கடலுமே நான்.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியி னுள்ளே உயிரெலாம் நான்.

கம்பனி சைத்த கவியெலாம் நான்
காருநர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொயையிருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரக் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினான் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டபல சக்திக் கணமெலாம் நான்
காரண மாகிக்க கதித்துனோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருட்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதியே நான்.

பாரதி கவிதைகள்-10: "விநாயகர் நான்மணிமாலை"

இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாய்.

பாரதி கவிதைகள்-10: "விநாயகர் நான்மணிமாலை"

இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாய்.

பாரதி கவிதைகள்-9:

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையகம்
பேதமை யற்றிடுங் காணீர்.

(பாரதியின் முரசுப் பாடலிலிருந்து ஒரு சிறு பகுதி)

பாரதி கவிதைகள்-9:

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையகம்
பேதமை யற்றிடுங் காணீர்.

(பாரதியின் முரசுப் பாடலிலிருந்து ஒரு சிறு பகுதி)

பாரதி கவிதைகள்-7: "ஆத்ம ஜெயம்"

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? – அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே.

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ –
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது
சத்தியமாகும் என்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்றாலும் திறமை பெறாது இங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?

பாரதி கவிதைகள்-7: "ஆத்ம ஜெயம்"

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? – அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே.

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ –
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது
சத்தியமாகும் என்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்றாலும் திறமை பெறாது இங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?

பாரதி கவிதைகள்-6:

இவ்வுலகம் இனியது;
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;
தீ இனிது;
நீர் இனிது;
நிலம் இனிது;
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று;
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
மழை இனிது;
மலை இனிது;
காடு இனிது;
ஆறுகள் இனியன;
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன;
பறவைகள் இனியன;
ஊர்வனவும் நல்லன;
விலங்குகளெல்லாம் இனியவை;
நீர் வாழ்வனவும் நல்லன;
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.

பாரதி கவிதைகள்-6:

இவ்வுலகம் இனியது;
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;
தீ இனிது;
நீர் இனிது;
நிலம் இனிது;
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று;
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
மழை இனிது;
மலை இனிது;
காடு இனிது;
ஆறுகள் இனியன;
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன;
பறவைகள் இனியன;
ஊர்வனவும் நல்லன;
விலங்குகளெல்லாம் இனியவை;
நீர் வாழ்வனவும் நல்லன;
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.

பாரதி கவிதை-6: ‘வரம் கேட்டலிலிருந்து’ ஒரு பகுதி

பாரதி கவிதை: ‘வரம் கேட்டலிலிருந்து’ ஒரு பகுதி

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

பாரதி கவிதை-6: ‘வரம் கேட்டலிலிருந்து’ ஒரு பகுதி

பாரதி கவிதை: ‘வரம் கேட்டலிலிருந்து’ ஒரு பகுதி

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

பாரதி கவிதைகள்-5: "நெஞ்சிற் கவலை…"

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை – தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.

பாரதி கவிதைகள்-5: "நெஞ்சிற் கவலை…"

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை – தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.

பாரதி கவிதைகள்-3:

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

(பாரதியின் “நல்லதோர் வீணையிலிருந்து” ஒரு பகுதி).

பாரதி கவிதைகள்-3:

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

(பாரதியின் “நல்லதோர் வீணையிலிருந்து” ஒரு பகுதி).

பாரதி கவிதைகள்-2: "மஹாசக்திக்கு விண்ணப்பம்"

பாரதி கவிதைகள்-2: “மஹாசக்திக்கு விண்ணப்பம்”

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

பாரதி கவிதைகள்-2: "மஹாசக்திக்கு விண்ணப்பம்"

பாரதி கவிதைகள்-2: “மஹாசக்திக்கு விண்ணப்பம்”

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

பாரதி கவிதைகள்-1: "பராசக்தி"

பாரதி கவிதைகள்-1: “பராசக்தி”

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்

நானிலத்தவர் மேனிலை எய்தவும்

பாட்டிலே தனியின்பத்தை நாட்டவும்

பண்ணிலே களிகூட்டவும் வேண்டி நான்

மூட்டும் அன்புக் கனலோடு வாணியை

முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்

காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்

கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.



மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்

வானிருண்டு கரும்புயல் கூடியே

இழையும் மின்னல் சரேலென்று பாயவும்

ஈர வாடை இரைந்தொலி செய்யவும்

உழைஎலாம் இடையின்றி இவ்வான நீர்

ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்

“மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்!

வாழ்க தாய்!” என்று பாடும் என் வாணியே.

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்

சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்;

அல்லினுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்

அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,

கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்,

புல்லினில் வயிரப்படை தோன்றுங்கால்,

பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!



பாரதியின் “பராசக்தியிலிருந்து” ஒரு பகுதி.