பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் எலும்புகள் பலப்படும்.
ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தடுக்க வல்லது.
சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும் நினைவாற்றல் கூடவும் உதவும்.
தேங்காயை நன்றாக மென்று, தேங்காய்ப் பாலை சுவைத்து மெதுவாக உண்பது வாய்ப்புன்னைக் குணமாக்க உதவும்.
பப்பாளிப்பழம் கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கு உகந்தது. ஜீரண சக்தியை அளிக்கவல்லது. உடலிலுள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது. குடற்புழுக்களை அழிக்க வல்லது. மாலைக்கண் போன்ற கண் நோய்களுக்கும் உகந்தது. சிறுநீர்ப் பையிலுள்ள கற்களைக் கரைக்க வல்லது. நரம்புத்தளர்ச்சிக்கு நல்லது. பற்கள், ஈறுகளைப் பலப்படுத்தும்.
பித்த சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது நெல்லிக்காய். மேலும் குடல் கோளாறுகளை போக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். இரத்த சோகைக்கும் உகந்தது. பற்கள் கெட்டிப்படும். ஈறுகளில் ரத்தம் கசிவதை நிறுத்தும். எலும்புகளை உறுதிப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும், இருதயத்திற்கும் நல்லது.
நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் A மற்றும் B இரண்டும் உள்ளது.
விளாம்பழச் சதையை சர்க்கரையுடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். விளாம்பழம் கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளுக்கு நல்லது. மேலும் வாய் துர்நாற்றம், வாய்ப்புண், நாக்கு மற்றும் ஈறுகளில் தோன்றும் புண்கள், காமாலை, பித்தக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து.
மாதுளம்பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அது ஒரு சிறந்த பித்த நிவாரணி. சளியை நீக்கும் ஆற்றல் கொண்டது. ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. முக்கியமாக மலட்டுத்தன்மையை நீக்கும் ஆற்றல் கொண்டது. நெஞ்செரிச்சலையும், காதடைப்பையும் நீக்கும். உடல் சூட்டைத் தணிக்கும்.
முட்டையில் தேவையான அமினோ அமிலங்கள் நிறைய உள்ளன. மேலும் வைட்டமின் D, வைட்டமின் B12, செலினியம், கோலைன் ஆகியவையும் உள்ளன. சமீபத்திய ஒரு ஆராய்ச்சிப்படி ஊளைச்சதையைக் குறைக்க தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நல்லது என்று கூறப்படுகிறது.
வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபேன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது செரோடொனின் ஆக மாற்றப்படுகிறது. அடிக்கடி ‘மூட்–அவுட்‘ ஆகிறவர்களுக்கு மீண்டும் நல்ல ‘மூடிற்குத்‘ திரும்ப செரோடொனின் பெரிதும் உதவுகிறது. மேலும் வாழைப்பழத்தில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால், பிராணவாயுவை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின்கள் திறமையாகச் செயல்பட உதவுகிறது. வாழைப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் அது மலச்சிக்கலுக்கு எதிரி.
கறிவேப்பிலையில் சுண்ணாம்புச்சத்து நிறைய இருக்கிறது. எனவே எலும்புகளை உறுதியாக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு. மேலும் கறிவேப்பிலையைத் துவையல் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் பசியைத் தூண்டும், ஜீரண சக்தி அதிகரிக்கும். கண்களுக்கும் நல்லது.
வெள்ளரிக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வெள்ளரிக்காய் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி சரியாக நடக்க உதவுகிறது. மேலும் அரிப்பு, கரப்பான் போன்ற நோய்களைப் போக்கும் ஆற்றலுடையது.