நலக்குறிப்புகள்-78: சுண்டைக்காய்

சுண்டைக்காய் கிருமிகளை அழிக்க வல்லதுஅடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு நச்சுக் கிருமிகள் உடலில் தங்காது

சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் ஏற்படும்  அரிப்பும்  நீங்கும்.

வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்படும்.

சுண்டை வற்றலுடன் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்புக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.  

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் எலும்புகள் பலப்படும்.


பக்கவாதம் பாதித்தவர்களுக்கு சுண்டைக்காய் மெல்ல மெல்ல குணம் தரும்.

இது கொழுப்பைக் குறைக்க வல்லது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது

ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தடுக்க வல்லது.


வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. ரத்த சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது.

வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ தையும் தடுக்கக் கூடியது.


நரம்பு மண்டலத்துக்கு சக்தி தர வல்லது

சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும் நினைவாற்றல் கூடவும் உதவும்.

நலக்குறிப்புகள்-77: வாழைப்பூ

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

நலக்குறிப்புகள்-76: உலர் திராட்சையின் அற்புதம்

புகை பிடிப்பதைத் தடுக்கும் அறுமருந்து  புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிட்டால் அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம்.   புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி இது.

நலக்குறிப்புகள்-76: புதினாக்கீரையின் பயன்கள்

உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து புதினாக் கீரையில் ஏராளமாக உள்ளது.  இரத்தத்தை  சுத்தி செய்யும் ஆற்றல் படைத்தது புதினா.  ருசியின்மையை நீக்கி, பசியை ஏற்படுத்தும்.  வாந்திபேதியை நிறுத்தும் ஆற்றல் கொண்டது.  வயிற்றுக்கும், குடலுக்கும் வலிமை தரும்.  

நலக்குறிப்புகள்-75: வேப்பிலைக் கொழுந்து

வேப்பிலைக் கொழுந்து உடலுக்கு நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. மேலும் அது குடலில் உள்ள பூச்சிக்களையும், புழுக்களையும் அழிக்கும்.

நலக்குறிப்புகள்-73: பழங்களின் பயன்கள்

உணவில் பழங்களையும், பழச்சாருகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது.  இதனால்  சருமம் மென்மையும், பொலிவும் பெற்றுத் திகழும்.  சதைகளின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாகிறது. உடல் நன்றாக வளைந்து கொடுக்கும். குரல் இனிமை பெரும்.  உடல் சூட்டைக்  குறைக்கும்.  மலச்சிக்கலை அகற்றும்.  

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, நாம் சாப்பிடும் பழம் நமக்கு ஒத்துக் கொள்கிறதா என்பது.  ஒவ்வாமை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக இருக்கும்.  குறிப்பிட்ட நோய்க்கு ஆட்படும் தன்மை கொண்டவர்களுக்கு சில பழங்கள் ஏற்றுக் கொள்ளாது.  அதையும் நாம் அறிந்து கொள்ளுதல் நலம்.  அடுத்து, தற்போது விற்கப்படும் பழங்களில் பூச்சி மருந்து தோய்ந்திருப்பதால் அவற்றால் நன்மைக்குப் பதிலாக தீமையே மேலிடுகிறது. இயற்கை விவசாய முறையில் பயிரடப்பட்டுக் கிடைக்கும் பழங்கள் மிகச் சிறந்தவை. மற்றொரு விஷயம், உலகில் எல்லாவற்றிலும் நன்மையையும், தீமையும் கலந்தே இருக்கின்றது.  எனவே, எதையும் அளவோடு, முறையோடு உண்ணவேண்டும்.  முரணான குணம் கொண்ட பழங்களை அடுத்தடுத்து உண்ணக் கூடாது.  எனவேதான் பொதுவாக, ஒரு நேரத்திற்கு ஒரு பழம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது. 

நலக்குறிப்புகள்-72: சீனி

இன்றைக்கு சீனி  இல்லாமல் பானங்கள் இல்லை.  காபி, டீ முதல் இனிப்புத் தின்பண்டங்கள் அனைத்திலும் சீனி.  சீனி வருமுன் நம்மவர்கள் பனைவெல்லம், கருப்பட்டி இவற்றையே சீனிக்குப் பதில் பயன்படுத்தினர்.  சீனியால் விளையும் கெடுதல்கள் பற்றி அறிந்த இயற்கை வைத்தியர் அதை ஆறு வெள்ளை நஞ்சுகளில் ஒன்றாகக் கூறுகின்றனர்.  

சீனி  நம் உடலில் உள்ள கால்சியம் உப்பை சிதைக்கிறது.  அதனால்  எலும்புகள் பலவீனம் அடைகின்றன.  கால்சியம் வளர்சிதை மாற்றத்தைக் குலைப்பதால் சர்க்கரை வியாதி போன்ற நோய்களும் வரக்கூடும்.  இன்று சர்க்கரை நோய்  அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். 

நலக்குறிப்புகள்-71:

நவீன சமையலில் வினீகர் எனப்படும் சோடியம் சிட்ரேட் பயன்படுத்துவது வெகு சாதாரணமாகி விட்டது.  இது எவ்வளவு கெடுதல் என்பதை அறியாமல் நாம் பயன்படுத்தி வருகிறோம்.  தோலில் அரிப்பு, தடிப்பு, ஏற்படுத்தும்.  உடலில் கெட்ட நீர் சேர வழிவகுக்கும்.  அதனால் பற்பல வியாதிகள் தோன்ற வழிவகுக்கும்.  எனவே சமயலில் வினீகரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

நலக்குறிப்புகள்-70: பொன்னாங்கண்ணிக்கீரை

பொன்னாங்கண்ணிக்கீரை  மகத்தான மருத்துவ குணங்கள் கொண்டது.  இதன் பெயரே இது பொண்ணுக்கு இணையானது என்றுரைப்பது.  இக்கீரையை சமைத்து உண்ண நீங்கும் தொல்லைகள்:

1. தொண்டைப்புண் 
2. உணவுக் குழாய்ப்புண் 
3. வாய்  துர்நாற்றம் 
4. கல்லீரல்  நோய்கள் 
5. வயிற்றெரிச்சல் 

மேலும் இது மேனியைப் பலபளப்பாக்கும்.  இதனால் இதயமும், மூளையும் பலம் பெரும். 

நலக்குறிப்புகள்-69:

எந்த மருத்துவரும் நோயை குணப்படுத்துவதில்லை. நம்முள்ளே இருக்கும் பிராண சக்தியே நோயை குணப்படுத்துகிறது. …  பிராண சக்தியை நம்முள்ளே வளர்த்துக் கொள்வதன் மூலமாகத்தான் வந்த நோயை குணப்படுத்தவும், நோய்கள் வருவதற்கு முன்னே  வராமல் தடுத்துக் கொள்ளவும் முடியும்சுவாமி.நாகலிங்கம், தலைவர், தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம் 

இரத்தின சக்திவேல் எழுதிய, “இயற்கை உணவுகள்” நூலின் அணிந்துரையிலிருந்து. 

நலக்குறிப்புகள்-68: திரு.வி. க.

நித்தியம்  அடையச்  சத்தியம்  வேண்டும்   
சத்தியம்  அடையச்  சத்துவம்  வேண்டும் 
சத்துவம்  சாரும்  சுத்த  உணவால்  – தமிழ்த் தென்றல் திரு.வி. க. 

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் – கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

http://ta.wikipedia.org/s/2a5

தமிழ்த் தென்றல் திரு.வி. க.  பற்றி ‘பிரான்சு கம்பன்  மகளிரணி’  வலைப்பூ:
http://francekambanemagalirani.blogspot.in/2011/09/blog-post_2346.html 

சேதுபதி  சேதுபதியின் “பாரதியாரும் திரு.வி.க.-வும்”  – ஒம் saசக்தி ஆன்லைனில்  இருந்து:

http://omsakthionline.com/?katturai=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE&publish=1376


நன்றி:  ‘பிரான்சு கம்பன்  மகளிரணி’  வலைப்பூ,   ஒம்சக்தி ஆன்லைன்,      Om Sakthi Publications  மற்றும்  Tamil Wikipedia, the free encyclopedia.

நலக்குறிப்புகள்-67: நோயின் மூல காரணங்கள்

அறியாமை,  அசட்டை,  புலனடக்கமின்மை,  இச்சைப்படி  நுகர்ச்சி,  இயற்கை விதிகளை  மீறல் –  இவைகளே நோயின் மூல காரணங்கள் – ஹென்றி லிந்தார்  

நலக்குறிப்புகள்-67: கத்திரிக்காய்

கத்திரிக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.  அதில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் கூட மிகுந்துள்ளன.  சளித்தொல்லை, வாய்வுத்தொல்லை ஆகியவற்றை குறைக்கும்  ஆற்றல் கொண்டது கத்திரிக்காய்.  

நலக்குறிப்புகள்-66: திராட்சை

திராட்சைப்பழம் மாரடைப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.  மேலும் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பான கொலஸ்ட்ராலை மட்டுப் படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு. 

நலக்குறிப்புகள்-65: வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தக்காரர்களுக்கு மிகவும் உகந்தது. அது ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. 

நலக்குறிப்புகள்-64: வேப்பிலை

வேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் ஓரளவு அறிவோம். நாம்  அறியாத சில தகவல்கள் இதோ: அது உடலுக்கு ஊறு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் பலவற்றை அழித்து (anti-bacterial, anti-parasitic, anti-fungal, anti-protozoal and anti-viral) நம்மை காக்கும் சக்தி கொண்டது. 

நன்றி:    ஆங்கில நாளிதழ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 

நலக்குறிப்புகள்-62: பீன்ஸ்

பீன்சிலிலுள்ள  நார்ச்சத்து  கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடியது.  பீன்ஸ்  இரத்தத்திலுள்ள  சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும், இதயம் சரிவர இயங்க உதவும்.  இதில் ஆன்டி-ஆக்சிடண்டுகள், ஃபாலிக் அமிலம், வைட்டமின் B6 மற்றும் மக்னீசியம்  உள்ளது.  

நலக்குறிப்புகள்-61: சீரகத்தின் சிறப்புகள்

சீர் + அகம்.  உள்ளுறுப்புகளை சீராக்கும் ஆற்றல் படைத்துள்ளதால்  இடப்பட்ட  காரணப் பெயர்.  உடலில்  ஆற்றல் பெருகுவதற்கும், வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறவும் உதவுகிறது.   நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்  உதவுகிறது.  குறிப்பாகப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்  மிகவும் நல்லது.  மாதவிடாய்ப் பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள்,  பால் கொடுக்கும் தாய்மார்கள்  உணவில் இதை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

நலக்குறிப்புகள்-60: சிறுகீரை

உடற்சூட்டைத் தனித்து, உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள சிறுகீரை உதவுகிறது. உடலுக்கு பலமும் தர வல்லது. கால் தொடர்பான நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

நலக்குறிப்புகள்-58: வாழைத்தண்டு

சிறுநீரைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் வாழைத்தண்டிற்கு உள்ளது. சிறுநீற்றுப் பையிலுள்ள கற்களையும் கறைக்கும் ஆற்றல் வாழைத்தண்டிற்கு உள்ளது. சிறுநீற்றுப் பையில் கல் இருப்பதாக அறிந்தவர்கள், வாரம் இரு முறையாவது வாழைத்தண்டை உணவில் சேர்க்க வேண்டும்.

நலக்குறிப்புகள்-57: தேங்காய்

தேங்காயை நன்றாக மென்று, தேங்காய்ப் பாலை சுவைத்து மெதுவாக உண்பது வாய்ப்புன்னைக் குணமாக்க உதவும்.

நலக்குறிப்புகள்-56: பப்பாளிப்பழம்

பப்பாளிப்பழம் கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கு உகந்தது. ஜீரண சக்தியை அளிக்கவல்லது. உடலிலுள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது. குடற்புழுக்களை அழிக்க வல்லது. மாலைக்கண் போன்ற கண் நோய்களுக்கும் உகந்தது. சிறுநீர்ப் பையிலுள்ள கற்களைக் கரைக்க வல்லது. நரம்புத்தளர்ச்சிக்கு நல்லது. பற்கள், ஈறுகளைப் பலப்படுத்தும்.

நலக்குறிப்புகள்-55: நெல்லிக்காய்

பித்த சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது நெல்லிக்காய். மேலும் குடல் கோளாறுகளை போக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். இரத்த சோகைக்கும் உகந்தது. பற்கள் கெட்டிப்படும். ஈறுகளில் ரத்தம் கசிவதை நிறுத்தும். எலும்புகளை உறுதிப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும், இருதயத்திற்கும் நல்லது.

நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் A மற்றும் B இரண்டும் உள்ளது.

நலக்குறிப்புகள்-54: விளாம்பழம்

விளாம்பழச் சதையை சர்க்கரையுடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். விளாம்பழம் கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளுக்கு நல்லது. மேலும் வாய் துர்நாற்றம், வாய்ப்புண், நாக்கு மற்றும் ஈறுகளில் தோன்றும் புண்கள், காமாலை, பித்தக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த மருந்து.

நலக்குறிப்புகள்-53: அத்திப்பழம்

மலச்சிக்கலுக்கு மிகவும் உகந்தது. உடல் பலம் பெறும், குறிப்பாக இதயம் பலம் பெறும் . சிவப்பு அணுக்கள் பெருகும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

நலக்குறிப்புகள்-52: மாதுளம்பழம்

மாதுளம்பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அது ஒரு சிறந்த பித்த நிவாரணி. சளியை நீக்கும் ஆற்றல் கொண்டது. ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. முக்கியமாக மலட்டுத்தன்மையை நீக்கும் ஆற்றல் கொண்டது. நெஞ்செரிச்சலையும், காதடைப்பையும் நீக்கும். உடல் சூட்டைத் தணிக்கும்.

நலக்குறிப்புகள்-51: தினம் ஒரு முட்டை!

முட்டையில் தேவையான அமினோ அமிலங்கள் நிறைய உள்ளன. மேலும் வைட்டமின் D, வைட்டமின் B12, செலினியம், கோலைன் ஆகியவையும் உள்ளன. சமீபத்திய ஒரு ஆராய்ச்சிப்படி ஊளைச்சதையைக் குறைக்க தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நல்லது என்று கூறப்படுகிறது.

நலக்குறிப்புகள்-50: வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ட்ரிப்டோபேன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது செரோடொனின் ஆக மாற்றப்படுகிறது. அடிக்கடிமூட்அவுட்ஆகிறவர்களுக்கு மீண்டும் நல்லமூடிற்குத்திரும்ப செரோடொனின் பெரிதும் உதவுகிறது. மேலும் வாழைப்பழத்தில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால், பிராணவாயுவை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின்கள் திறமையாகச் செயல்பட உதவுகிறது. வாழைப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் அது மலச்சிக்கலுக்கு எதிரி.

நலக்குறிப்புகள்-49: கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் சுண்ணாம்புச்சத்து நிறைய இருக்கிறது. எனவே எலும்புகளை உறுதியாக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு. மேலும் கறிவேப்பிலையைத் துவையல் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் பசியைத் தூண்டும், ஜீரண சக்தி அதிகரிக்கும். கண்களுக்கும் நல்லது.

நலக்குறிப்புகள்-48: வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வெள்ளரிக்காய் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி சரியாக நடக்க உதவுகிறது. மேலும் அரிப்பு, கரப்பான் போன்ற நோய்களைப் போக்கும் ஆற்றலுடையது.