பல ஆண்டுகளாக வயிற்றுக்கோளாறு, மார்பின் இடது பக்கத்தில் வலியும், கழுத்து வலியும் இருந்தது. பல ஆயிரக்கணக்கில் மருந்து, மாத்திரைகளுக்கும், என்டோஸ்கோபி ஆய்வுக்கும் செலவு செய்தும் பயனில்லை. 26-வது நலவாழ்வு முகாமில் கலந்துகொண்டு, குடிநீர் சிகிச்சை, அஹிம்சை எனிமா, நின்று–அமர்ந்து–படுத்து செய்யும் ஆசனங்கள் கற்றேன். எடை எழுபது கிலோவிலிருந்து அறுபது கிலோவாகக் குறைந்தது.
அதிகாலையில் கருவேப்பிலை, கொத்தமல்லி, வல்லாரை, அருகம்புல் அவற்றுள் ஒன்றின் சாறு, காலை–மாலை தேங்காய் பழங்கள், மதியம் வழக்கமான சமைத்த உணவு அளவாகச் சாப்பிட்டேன்.
வயிற்றுக் கோளாறு, நெஞ்சு வலி, கழுத்துவலி எல்லாம் மறைந்துவிட்டன.
– திரு க.அழகன் (வயது 43), ‘இயற்கை மருத்துவம்‘ மாத இதழ் (ஆகஸ்ட் 2009).
நன்றி: திரு க.அழகன் மற்றும் ‘இயற்கை மருத்துவம்‘ மாத இதழ்.