என் கவிதை-7:

குறுகிய  உள்ளங்கள் 
குறுகிய எண்ணங்கள் 
குறுக்கு வழிகள்
குளறுபடிகள், குற்றங்கள் 
அடாவடித்தனங்கள் 
அத்துமீறல்கள் 
அராஜகங்கள் 
அநீதிகள்.  
விரிந்த வானும் 
பரந்த கடலும்
உறுத்தவேயில்லையோ?   

என் கவிதை-6: "கூண்டுக்கிளியும், கூண்டுப்புலியும்"

கூண்டுக்கிளிக்கும்
கூண்டுப்புலிக்கும்
கல்யாணம் –
பெரியவர்களால்
நிச்சயிக்கப்பட்ட
கல்யாணம்.
ஆரம்ப முதலே
கிளிக்கு
புலியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
புலிக்கும்
கிளியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
கிளி, புலியைத்
தேர்ந்தெடுத்த
வார்த்தைகளால்
வறுத்தெடுக்க,
புலி
ஊரே அதிரும் வண்ணம்
உறும,
யார் வெல்வது?
சந்தேகமென்ன,
கிளிதான்!
கூண்டுப்புளிக்கு
யார் அஞ்சுவர்?
புலி மண்டியிட்டு
முன்னங்கால்களால்
காதைப் பொத்தி,
கண்ணை மூடி,
சாய்ந்தே விட்டது.

என் கவிதை-6: "கூண்டுக்கிளியும், கூண்டுப்புலியும்"

கூண்டுக்கிளிக்கும்
கூண்டுப்புலிக்கும்
கல்யாணம் –
பெரியவர்களால்
நிச்சயிக்கப்பட்ட
கல்யாணம்.
ஆரம்ப முதலே
கிளிக்கு
புலியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
புலிக்கும்
கிளியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
கிளி, புலியைத்
தேர்ந்தெடுத்த
வார்த்தைகளால்
வறுத்தெடுக்க,
புலி
ஊரே அதிரும் வண்ணம்
உறும,
யார் வெல்வது?
சந்தேகமென்ன,
கிளிதான்!
கூண்டுப்புளிக்கு
யார் அஞ்சுவர்?
புலி மண்டியிட்டு
முன்னங்கால்களால்
காதைப் பொத்தி,
கண்ணை மூடி,
சாய்ந்தே விட்டது.

என் கவிதை-5: "பட்டியல்"

வல்லபை கணபதி
வாக்(கு) தேவி
வால்ட் விட்மன்
வாகையடி அம்மன்
துணை.

அப்பாவிப் பையன்
அசட்டுப் பையன்
கற்க கற்க
கள்ளம் கற்க
அங்கே போ
இங்கே போ
எங்கேயும் போ
கால் போனபடி.

சுற்று, சுற்று
பொறுக்கு, பொறுக்கு
கிடைத்ததெல்லாம்
பொறுக்கு.
நல்லது, கெட்டது
கண்டது, கழியது
குப்பை, குப்பை
ஒரு வண்டிக்குப்பை
இல்லையில்லை
பல வண்டிக்குப்பை!

பள்ளியில் கொஞ்சம்
பாதியில் கொஞ்சம்
ஆட்டம், பாட்டம்
திருதிரு முழி
திருதிரு முழி
படி, படி, படி, படி
புத்தகம், புத்தகம்
புத்தகம், புத்தகம்
சினிமா, சினிமா
சாப்பாடு, சாப்பாடு

அந்த ஊர்
இந்த ஊர்
எத்தனையூர்!

புத்தக மூட்டை
புழுகு மூட்டை
அழுக்கு மூட்டை
அறிந்த மூட்டை
அறியாத மூட்டை
குழப்ப மூட்டை
எத்தனை மூட்டைகள்!

தூக்கு, தூக்கு
ஓடு, ஓடு
வேலை, வேலை
ஐயோ வேலை!

தம்பி படி
தங்கை படி
கல்யாணங்கள்
கச்சேரிகள்
கடலை மிட்டாய்கள்

சோதனைகள்
பரிசோதனைகள்
மன்றங்கள்
மனிதர்கள்
மருத்துவங்கள்
மனக்குழப்பங்கள்
உலகங்கள்
உதைகள்
ஊர் சுற்றும் வாய்ப்புக்கள்
திட்டங்கள்
தீட்டல்கள்
அனுபவங்கள்
ஆச்சரியங்கள்
கற்றல்கள்
கதறல்கள்
எத்தனை படலங்கள்!

கற்ற படலம்
கனவுப் படலம்
காய்ந்த படலம்
விற்ற படலம்
வேஷப் படலம்
வேதனைப் படலம்
நட்புப் படலம்
நாடகப் படலம்
புத்தகப் படலம்
புரியாத படலம்
குடும்பப் படலம்
குசேலப் படலம்
குழப்பப் படலம்
தனிமைப் படலம்
தடுமாறும் படலம்

நடுவில் –
நீ யார் பெண்ணே?
சரி, சரி, வா, வா.
நட, நட
வேகமாய் நட
கட்டில், தொட்டில்
சுட்டிப்பொண்ணு
குட்டிப்பையன்
கொஞ்சல்கள்
குலாவல்கள்
போதும், போதும்
கடன்கள்
கவலைகள்
கழுத்தறுப்புகள்
காயங்கள்
இங்கே கடன்
அங்கே கடன்
ஒளிஞ்சுக்கோ
ஒளிஞ்சுக்கோ
புத்தகத்தில்
ஒளிஞ்சுக்கோ

படி, படி
நிறையப் படி
கதைகள்
கவிதைகள்
கட்டுரைகள்
காவியங்கள்
அறிவுத்தாகம்
ஆங்கிலமோகம்
புத்தகப் புழு
புத்தகப் பைத்தியம்
எழுது, எழுது
சில்வர் ஃபிஷ்
டாக்டர், டாக்டர்

நண்பர்கள்
நல்லவர்கள்
நயவஞ்சகர்கள்
நாடகங்கள்
நாட்குறிப்புகள்
தேடல்கள்
தேவைகள்
ஏக்கங்கள்
தூக்கங்கள்
பாராட்டுக்கள்
பஞ்சப்பாட்டுக்கள்
ஒட்டல்கள்
உரசல்கள்
மேலே போ
மேலே போ
நோய்கள், நொடிகள்
மருந்துகள், மாயங்கள்
மக்கு, மக்கு
முடி கொட்டுது
மீசை வெளுக்குது
அப்பா டாட்டா
அம்மா நோட்டா?

நீண்ட பயணம்
நெடிய பயணம்
கடவுளைத் தேடு
காசைத் தேடு
நட, நட
வேகமாய் நட
வாங்கல், விற்கல்
வாட்டல், வதங்கல்
வீடு, வாஹனம்

விளையாட்டுப் பொம்மைகள்

தேடு, தேடு
மாப்பிள்ளை தேடு
போய் வா பெண்ணே
போய்வா!

படிடா பையா படி!
பிடிடா வேலை பிடி!

வெள்ளைத் தாள்
வெறித்துப் பார்
கிறுக்கு, கிறுக்கு
முடிந்தவரை கிறுக்கு
அப்புறம் என்ன?
கத்திரிக்காய் காய்க்க
கதை முடிய
கையசைத்து
கடையை மூடிப்
போய் வா!

என் கவிதை-5: "பட்டியல்"

வல்லபை கணபதி
வாக்(கு) தேவி
வால்ட் விட்மன்
வாகையடி அம்மன்
துணை.

அப்பாவிப் பையன்
அசட்டுப் பையன்
கற்க கற்க
கள்ளம் கற்க
அங்கே போ
இங்கே போ
எங்கேயும் போ
கால் போனபடி.

சுற்று, சுற்று
பொறுக்கு, பொறுக்கு
கிடைத்ததெல்லாம்
பொறுக்கு.
நல்லது, கெட்டது
கண்டது, கழியது
குப்பை, குப்பை
ஒரு வண்டிக்குப்பை
இல்லையில்லை
பல வண்டிக்குப்பை!

பள்ளியில் கொஞ்சம்
பாதியில் கொஞ்சம்
ஆட்டம், பாட்டம்
திருதிரு முழி
திருதிரு முழி
படி, படி, படி, படி
புத்தகம், புத்தகம்
புத்தகம், புத்தகம்
சினிமா, சினிமா
சாப்பாடு, சாப்பாடு

அந்த ஊர்
இந்த ஊர்
எத்தனையூர்!

புத்தக மூட்டை
புழுகு மூட்டை
அழுக்கு மூட்டை
அறிந்த மூட்டை
அறியாத மூட்டை
குழப்ப மூட்டை
எத்தனை மூட்டைகள்!

தூக்கு, தூக்கு
ஓடு, ஓடு
வேலை, வேலை
ஐயோ வேலை!

தம்பி படி
தங்கை படி
கல்யாணங்கள்
கச்சேரிகள்
கடலை மிட்டாய்கள்

சோதனைகள்
பரிசோதனைகள்
மன்றங்கள்
மனிதர்கள்
மருத்துவங்கள்
மனக்குழப்பங்கள்
உலகங்கள்
உதைகள்
ஊர் சுற்றும் வாய்ப்புக்கள்
திட்டங்கள்
தீட்டல்கள்
அனுபவங்கள்
ஆச்சரியங்கள்
கற்றல்கள்
கதறல்கள்
எத்தனை படலங்கள்!

கற்ற படலம்
கனவுப் படலம்
காய்ந்த படலம்
விற்ற படலம்
வேஷப் படலம்
வேதனைப் படலம்
நட்புப் படலம்
நாடகப் படலம்
புத்தகப் படலம்
புரியாத படலம்
குடும்பப் படலம்
குசேலப் படலம்
குழப்பப் படலம்
தனிமைப் படலம்
தடுமாறும் படலம்

நடுவில் –
நீ யார் பெண்ணே?
சரி, சரி, வா, வா.
நட, நட
வேகமாய் நட
கட்டில், தொட்டில்
சுட்டிப்பொண்ணு
குட்டிப்பையன்
கொஞ்சல்கள்
குலாவல்கள்
போதும், போதும்
கடன்கள்
கவலைகள்
கழுத்தறுப்புகள்
காயங்கள்
இங்கே கடன்
அங்கே கடன்
ஒளிஞ்சுக்கோ
ஒளிஞ்சுக்கோ
புத்தகத்தில்
ஒளிஞ்சுக்கோ

படி, படி
நிறையப் படி
கதைகள்
கவிதைகள்
கட்டுரைகள்
காவியங்கள்
அறிவுத்தாகம்
ஆங்கிலமோகம்
புத்தகப் புழு
புத்தகப் பைத்தியம்
எழுது, எழுது
சில்வர் ஃபிஷ்
டாக்டர், டாக்டர்

நண்பர்கள்
நல்லவர்கள்
நயவஞ்சகர்கள்
நாடகங்கள்
நாட்குறிப்புகள்
தேடல்கள்
தேவைகள்
ஏக்கங்கள்
தூக்கங்கள்
பாராட்டுக்கள்
பஞ்சப்பாட்டுக்கள்
ஒட்டல்கள்
உரசல்கள்
மேலே போ
மேலே போ
நோய்கள், நொடிகள்
மருந்துகள், மாயங்கள்
மக்கு, மக்கு
முடி கொட்டுது
மீசை வெளுக்குது
அப்பா டாட்டா
அம்மா நோட்டா?

நீண்ட பயணம்
நெடிய பயணம்
கடவுளைத் தேடு
காசைத் தேடு
நட, நட
வேகமாய் நட
வாங்கல், விற்கல்
வாட்டல், வதங்கல்
வீடு, வாஹனம்

விளையாட்டுப் பொம்மைகள்

தேடு, தேடு
மாப்பிள்ளை தேடு
போய் வா பெண்ணே
போய்வா!

படிடா பையா படி!
பிடிடா வேலை பிடி!

வெள்ளைத் தாள்
வெறித்துப் பார்
கிறுக்கு, கிறுக்கு
முடிந்தவரை கிறுக்கு
அப்புறம் என்ன?
கத்திரிக்காய் காய்க்க
கதை முடிய
கையசைத்து
கடையை மூடிப்
போய் வா!

என் கவிதை-4: "விழித்தெழுவாய்!"

நீ உறங்கினால்
என் வாழ்க்கை
இருண்டுவிடும்.
உன் உதவியின்றி
முயற்சியுமில்லை,
முன்னேற்றமுமில்லை.
உறங்கியது போதும்,
விழித்தெழுவாய்,
ஆக்கினையே!
இது என்
ஆக்கினை!!

என் கவிதை-4: "விழித்தெழுவாய்!"

நீ உறங்கினால்
என் வாழ்க்கை
இருண்டுவிடும்.
உன் உதவியின்றி
முயற்சியுமில்லை,
முன்னேற்றமுமில்லை.
உறங்கியது போதும்,
விழித்தெழுவாய்,
ஆக்கினையே!
இது என்
ஆக்கினை!!

என் கவிதை-3:

சேவல் கூவுது;

மீண்டும் கூவுது;

மீண்டும் மீண்டும் கூவுது.

பலனில்லை.

உள்ளே

அலாரம் ஒலிக்க,

வெளியே

ஆலைச் சங்கொலிக்க,

பொழுது புலர்ந்தது.

அவமானத்தில்

கூனிக்குறுகியது

சேவல்.

என் கவிதை-3:

சேவல் கூவுது;

மீண்டும் கூவுது;

மீண்டும் மீண்டும் கூவுது.

பலனில்லை.

உள்ளே

அலாரம் ஒலிக்க,

வெளியே

ஆலைச் சங்கொலிக்க,

பொழுது புலர்ந்தது.

அவமானத்தில்

கூனிக்குறுகியது

சேவல்.

என் கவிதை-2 : பாட்டி!

பாட்டி! பாட்டி!!
பாடாய்ப் படுத்தும் பாட்டி.
இரவைப் பகலாய்,
பகலை இரவாய்ப்
பார்க்கும் பாட்டி.
அது கூடாது,
இது கூடாது,
எதிலும் பிரச்னை.
பல்தேய்ப்பது முதல்
குளிப்பு,
உடை, உணவு,
தலை சீவல்,
பள்ளி, படிப்பு,
படுக்கை என்று
அனைத்திலும்
உன் மூக்கு!
உல்லாசமான
கோடை விடுமுறை
சொல்லாமல் போனது.
ஓடும் ரயிலில் உயிர் விட்டு
ஒன்றுமில்லாமல்
செய்த பாட்டி!


என் கவிதை-2 : பாட்டி!

பாட்டி! பாட்டி!!
பாடாய்ப் படுத்தும் பாட்டி.
இரவைப் பகலாய்,
பகலை இரவாய்ப்
பார்க்கும் பாட்டி.
அது கூடாது,
இது கூடாது,
எதிலும் பிரச்னை.
பல்தேய்ப்பது முதல்
குளிப்பு,
உடை, உணவு,
தலை சீவல்,
பள்ளி, படிப்பு,
படுக்கை என்று
அனைத்திலும்
உன் மூக்கு!
உல்லாசமான
கோடை விடுமுறை
சொல்லாமல் போனது.
ஓடும் ரயிலில் உயிர் விட்டு
ஒன்றுமில்லாமல்
செய்த பாட்டி!


என் கவிதை-1: குறைப்பிரசவம்

என் கவிதை

குறைப்பிரசவம்

மூக்குமில்லை, முழியுமில்லை,
முகமுமில்லை,முடியுமில்லை.
பிண்டம்,
சதைப் பிண்டம்,
வெறும் சதைப் பிண்டம்.
வேதனையில் பிறந்து,
வேதனையில் முடிந்த
விடியாக் கனவு.

என் கவிதை-1: குறைப்பிரசவம்

என் கவிதை

குறைப்பிரசவம்

மூக்குமில்லை, முழியுமில்லை,
முகமுமில்லை,முடியுமில்லை.
பிண்டம்,
சதைப் பிண்டம்,
வெறும் சதைப் பிண்டம்.
வேதனையில் பிறந்து,
வேதனையில் முடிந்த
விடியாக் கனவு.