முதியோர் தின பிரார்த்தனை

பிறவிப்பயனை அடைதல் வேண்டும்.
முழுமை பெற வேண்டும்.
மகத்தான சாதனைகள் புரிந்திடல் வேண்டும்.
உரிய நேரம் வந்தவுடன் முழு மனதோடு, இன்முகத்தோடு, மலர்ந்த முகத்தோடு, சிரித்த முகத்தோடு நின் திருவடிகளை வந்தடைதல் வேண்டும்.
இயலாமை, முதுமை, பிணி என்று படுக்கையில் விழுமுன், அடுத்தவர்களுக்கு சுமையாகுமுன் இந்த உடலை உதறிவிட்டு, நின் திருவடிகளை நல்லபடியாக வந்தடைதல் வேண்டும்.
தேவையில்லாமல் இந்த உடலின் மீதோ, உயிரின் மீதோ, உற்றார் மீதோ, உறவினர் மீதோ, பொருட்கள் மீதோ அல்லது வேறெதென் மேலோ கடும்பற்றுக் கொண்டு துன்பப் படக்கூடாது, துயரப்படக் கூடாது.
முக்கியமாக அடுத்தவர்களைத் துன்பப் படுத்தக்கூடாது, துயரப் படுத்தக்கூடாது.
கருணை காட்டு தாயே! நல்லருள் புரிவாய் அம்மா!
சரணம், சரணம், சரணம்!