Audio-Video Poems-2: 12 Poems of Emily Dickinson – Aaron Copeland


For a detailed article on Emily Dickinson from Wikipedia:

To read the Complete Poems of Emily Dickinson from Project Gutenberg:

To listen to Selected Poems of Emily Dickinson (audio file – MP3 format)from Project Gutenberg:

Grateful thanks to Aron Copeland, punkpoetry, YouTube, Project Gutenberg and Wikipedia, the free encyclopedia.

Audio-Video Short Stories-6: If You Like Someone, Tell Them


Grateful thanks to XxDarkStars and YouTube.

இன்றைய சிந்தனைக்கு-140:

படித்தல்  என்பதே  ஆசிரியரும்  மாணவரும்  ஒரு சேர  கற்றுக்கொள்வதுதான். 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-45:

எத்தனைதான்  சன்மம்  எடுத்தெத்தனை  நான்பட்ட  துயர்

அத்தனையும்  நீ  அறிந்ததன்றோ  பராபரமே  

யோக சித்தி-59: அறநெறி-5

மூவழுக்கு  நீங்குகவே,  முத்தூய்மை  ஓங்கிநர
தேவர்களும்  வாழ்க  செழித்து.

மனிதனை இன்பநிலை  சேராது  தடுப்பான  பழமையான  மூன்று  அழுக்குகள்:-  மோகவெறி,  மாயாபாசம், தன்னல  அகந்தை.  இவை  நீங்குக.  எப்படி  இவற்றை  நீக்குவது?  முத்தூய்மை,  அதாவது  மன, மொழி,  மெய்த் தூய்மை  ஓங்கவேண்டும்.   இவ்வாறு  மலமொழிந்து  அமலமானோர்  தேவராவார்.  அத்தகைய  சுத்த  தேவர்  குலம்  உலகிற்  செழித்தோங்குக! 

Self-Improvement-84: "Increasing Your Income 1000% Formula" by Brian Tracy


For a detailed article on Self-Improvement Guru, Brian Tracy from Wikipedia:

Grateful thanks to Brian Tracy, Houserebate, YouTube and Wikipedia, the free encyclopedia.

A Thought for Today-446:

You never know what you are capable of until you try – Unknown

Picture of the day-279:

இன்றைய சிந்தனைக்கு-139:

வறுமை  குற்றங்களுக்குத்  தாயெனில்,  புத்தியின்மை  அவற்றுக்குத்  தந்தை.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-44:

இன்று  புதிதன்றே  எளியேன்  படுந்துயரம்

ஒன்றும்  அறியாயோ  உரையாய்  பராபரமே 

யோக சித்தி-58: அறநெறி-4

வசை  சினவஞ்ச  வழக்கற்றுத்  தீய
நசையற்று  நானுற்று  வாழ்.

மனத்தைக்  கெடுக்கும்  தீமைகளைக்  காண்மின்:-

1 .  வசை:  பிறரைப் பழித்தல்,  சொல்லாற்  புண்படுத்துதல்,  மரியாதைக் குறைவாய்ப்  பேசுதல்,  பண்டமொருபுரம் இருக்கப்  பழியோருவர்  மேற்  சுமத்துதல் எல்லாம்  வசையாம்.
2 . சினம்:  கோபம்;  இதனால் குணங் கெடும்,  மனங் கெடும், நரம்பு தளரும்,  ஆயுட்  கெடும்,  ஆற்றல்  கெடும்.
3 . வஞ்சம்:  கபடம், சிறுமை,  பொய், கொடுமை, மாயம்,  பிறரை  ஏமாற்றல் வஞ்சனையாம்.
4 . வழக்கு:  பொய் வழக்கு,  வியாஜ்ஜியம்,   வம்பு  இவற்றால்  அமைதி  கெடும்.
5. தீயநசை: துராசை,  காமக்குரோதாதிகள் இவையெல்லாம்  நீங்கவேண்டும்.
இவை  நீங்க  என்ன  வழி?

நாணுறல் :    அடக்கம், கௌரவம், மரியாதை,  விநயம்,  பிறர் பழியும், தன் பழியும்  அஞ்சல்,  நோகாது நோவுறுத்தாது,    பிறர் மனம் சுளிக்காது,  சீர்மையுடன் நடத்தல்.  வெட்டெனப் பேசாமை,  சூதுவாதின்மை,  நாய்ச்சினம்,  நரிவஞ்சம்,  பாம்புச் சீற்றம்,  அகங்கரிப்புகள் இன்றி  பெருந்தன்மை பிடித்தொழுகல் முதலியன நாண் எனப்படும்.  நாகரிகத்தின் நல்லுயிர் நாணே. 

A Thought for Today-445:

To know how to grow old is the master work of wisdom, and one of the most difficult chapters in the art of living – Amiel

Picture of the day-278:

Videos to Watch-3: 100 GREAT LIVES (rare books ep.10)

Grateful thanks to KFCRIS and YouTube.

Audio-Video Short Stories-5: ANTON CHEKHOV’s 20 Best Stories


For a detailed article on Anton Chekhov from Wikipedia:

Grateful thanks to Xensboy, YouTube and Wikipedia, the free encyclopedia.

Videos for Spiritual Aspirants-7: "Science of Sprituality #1 of 3 " by Swami Chinmayananda


For a detailed article on Swami Chinmayananda from Wikipedia:

Grateful thanks to Swami Chinmayananda, JorgeLuisJaureguiM, YouTube and Wikipedia, the free encyclopedia.

இன்றைய சிந்தனைக்கு-138:

ஆரோக்கியம்,  சந்தோசம்  இரண்டும்  ஒன்றையொன்று  சார்ந்து  இருக்கின்றன. 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-43:

நன்றறியேன்  தீதறியேன்  நான்என்று  நின்றவன்ஆர்

என்றறியேன்  நான்ஏழை என்னே  பராபரமே     

A Thought for Today-444:

Garrulity is a sign of stupidity – Proverb

Picture of the day-277:

யோக சித்தி-57: அறநெறி-3

கொலைபுலை,  கூத்தி,  குடிகளவு  சூதாம்
வலுத்த  நரக  வழி.
மனித வாழ்வைத்  துன்பகரமாகக  வழியாவன  ஆறு  இழிநடைகள்:
1. கொலை:  உயிர்க்கொலை  கூடாது.  சீவனைச்  சிவமயமாகக்  கருதவேண்டும்.  அஹிம்சா  விரதமே  அரிய  பெரிய  தருமமாகும்.
2. புலை:   புலாலுண்ணல்,  கொன்றதைத் தின்று  உண்ணல்,  உடலை  வளர்க்கப்  போதுமான  தாவரப்  பொருள்  இருக்கையில்,  பிற  உயிர்களைக் கொன்று  அவற்றின்  ஊனை  உண்ணல்  எவ்வளவு  கொடுமை!
3.  கூத்தி:  வேசையுறவு,  விபச்சாரம்.  தருமபத்திநியுடன்  கூட  இல்லறம்  நடத்த வேண்டும்.  வேசை  என்னும்  மாசு  உலகிற் படராதொழியவேண்டும்.
4.  குடி:  தென்னங்கள்:  ஈச்சங்கள்,  திராட்சைக்கள்,  விஸ்கி,  பிராந்தி,  தேயிலை,  காப்பி,  சுருட்டு  முதலிய  மயக்கப்  பொருட்கள்  நரம்பைத்  தளர்த்தும்.  மனத்  திட்பத்தைக் கெடுக்கும்.  பிணி பல  செய்யும்.
5.  களவு:  மனத்தை,  வாழ்வை,  மானத்தைக் கெடுக்கும் கொடிய பாவம் களவு.  பிறருக்குரியதை  தன்னலத்துடன்  அபகரித்தல்  களவாகும்.
6.  சூது:  சகுனிவலை; சீட்டு,  பகடை,  உழக்குருட்டல்,  குதிரைப்பந்தயம்,  வீண்  போதுபோக்கல்   எல்லாம்  சூதாட்டமே.  வீண் போதுபோக்கல் காலத்தைச்  சூதாடலாகும்.  பொய்வாய்ச்  சூதாகும்.   சீருஞ் செல்வமும், பண்பும், பரிசும்  சூதால்  கெடும்.

இந்த  ஆறு  தீமைகளால்  இருள்  வறுமை,  துன்பம்,  நோய்,  மதிமயக்கம்,  இடர்,  இன்னல்கள்  எல்லாம்  சூழ்ந்து  மனித  வாழ்வை  நரகமாக்கும்.                   

A Thought for Today-443:

Live with Passion – Anthony Robbins

Picture of the day-276:

Interview-7: Jorge Luis Borges


For a detailed article on Jorge Luis Borges from Wikipedia:

Grateful thanks to Spindlework, YouTube and Wikipedia, the free encyclopedia.

இன்றைய சிந்தனைக்கு-137:

மதம்  ஒரு  வழி;  முடிவன்று.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-42:

பாசம்போய்  நின்றவர்போல்  பாராட்டி  ஆனாலும்

மோசம்  போனேன்நான்  முறையோ  பராபரமே 

யோக சித்தி-56: அறநெறி-2

அன்புண்மையின்  சொலடக்கம்  பொறுமை  அருள்
இன்பப்  பொதுநெறியென்று  எண்.

எல்லோருக்கும்  பொதுவாக  அறநூல்  சொல்லும்  இன்பவழி:-

1 .  அன்பு :  கடவுலன்பு,  ஆருயிரன்பு.
2 .  உண்மை:  மனசாட்சிக்கு  இசைந்து,  உள்ளத்தில் உண்மை,  வாயில்  வாய்மை,  மெயில்  மெய்ம்மை கொண்டு நடத்தல்
3.  இன்சொல்:  வஞ்சம்,  பொறாமை, கடுமை இல்லாது,  பிறருக்கு  நன்மை தரும்  இனிய சொல், இத மொழி.
4.  அடக்கம்:  செருக்கு, தற்புகழ் இல்லாமல்,  இடம்பம் இல்லாமல், அமைதியாக  அறிந்து  திருவருளைப் பணிந்து நடத்தல்
5.  பொறாமை:  நன்முயற்சிகளில் எத்தனைச் சோதனைகள், இடர்கள் வரினும் வெற்றி தோல்விகளில் வேறுபடாமல் நிதானமாகப் பொறுமையாக நடத்தல், திதீட்சை
6.  அருள்:  எல்லா உயிர்களும் இறைவனும் உடலே என்றெண்ணி  அனைத்திடமும்  எல்லையற்ற கருணையும்,  இரக்கமும், நேயமும் கொண்டு அன்பு செய்தல்;  இறைவன் திருவருளை வேண்டுதல்

இவையே, உலகோர்  உய்யத்  தத்துவப்  பெரியாரும், வித்தகப் புலவரும் பலவாறாகச் சொன்ன உபடேசங்களின் சாரமாகும்.  இவற்றைச் சிந்தித்தொழுகுக.  இவை  விண்ணின்பம்  அளிப்பன.       

Thought for Today-442:

Success often comes to those who dare and act – Jawaharlal Nehru

Picture of the day-275:

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-11: "சின்னச் சின்ன மழைத்துளிகள்" – படம்: என் சுவாசக்காற்றே


இது மழைக்காலம்.  மழை விட்டுவிட்டுப்  பெய்துகொண்டிருக்கிறது.  தென்மேற்குப் பருவக்காற்று  தொடங்கிவிட்டது.  இனி  மழைதான்  என்று  வானிலை  அறிவிப்பும் வந்துவிட்டது.  இன்று  விஜய்  சூப்பர் சிங்கரில்  ஒரு  அன்பர்  இந்த மழைப்பாட்டைப்  பாடியதும்  மனதில் ஒரு பரவசம்.  இது எனக்குப்  மிகவும் பிடித்த  பாடல்களில் ஒன்று.  உடனே யூடூபில் தேடி  இங்கே பதிவு செய்வதில்  பெருமகிழ்ச்சி அடைகிறேன்.   அங்கே இருபத்தோராயிரம் பேருக்குமேல்  பார்த்து-கேட்டு  மகிழ்ந்திருக்கின்றனர்  என்பதை அறிந்து கொண்டேன்.

பாடலை அற்புதமாக எழுதிய கவிஞர் வைரமுத்துவிற்கும்,  அதை இனிமையாகப்  பாடிய எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கும், சொக்கவைக்கும் இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானிற்கும், யூடூபில் அதைப் பதிவு செய்த video232342 -விற்கும்,  யூடூபிற்கும்  உளமார்ந்த  நன்றிகள்.