திருவருட்பா-3:

புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படாது இரவும் பகலும்நின் தனையே
கருத்தில் வைத்து ஏந்துதற் இசைந்தேன்
உன்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பினேன் எனது நண்பனே
நலன்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடல் எனையே.

Leave a comment