நெல்லையப்பன் கவிதைகள்-17: "நம்பிக்கை விற்பவன்"

மழையில் நனைந்தபடி வந்து,
கிளிக்கூண்டு நனையாதபடி
தன் பழைய சைக்கிளை நிறுத்திவிட்டு,
ரோட்டோர உணவகத்தின் உள்ளே,
பையத் துழாவி சில்லறைகளை
பலமுறை எண்ணிப்பார்த்துவிட்டு,
மழையால் தொழில் பாதிக்கப்பட்டதாக
மழையை கெட்டவார்த்தையில் திட்டி,
“இதெல்லாம் ஒரு பிழைப்பா?” என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு,
அரைச்சாப்பாடு கிடைக்குமா என்று
தயங்கியபடி கேட்டவனுக்கு,
தலைவாழை இல்லை போட்டு,
சிறப்பு சாப்பாடாக
ஒவ்வொன்றாய் பரிமாறியபடி
முதலாளி சொன்னார்:
“உன் பெருமை உனக்குப் புரியவில்லை;
அரசு செய்யமுடியாததை,
அப்பன் ஆத்தா செய்யத் தவறியதை,
கிளி ஜோதிடன், நீ செய்கின்றாய்!”
நீ நம்பிக்கை விற்கின்றாய்;
நாடிவருபவற்கு நல்லது சொல்கின்றாய்;
உருப்படாமல் போய்விடுவாய் என்று
ஒருவருக்கும் நீ சொல்வதில்லை.
இடரினி இல்லை என்றும்,
விரைவில் துன்பம் விலகும் என்றும்,
நம்பிக்கை விதைக்கும் நீ
நல்ல தொழில் செய்கின்றாய்;
உனக்கு சாப்பாடு போடுவதில்

சந்தோசம் எனக்குத்தான் ;
பணம் தரவேண்டாம் நீ,
நன்றாகச் சாப்பிடப்பா”
வயிறுமுட்டச் சாப்பிட்டபின்
கிழிக்கும் உணவு தந்துவிட்டு,
கைதொழுது சொன்னான்:
“ஐயா, பெரியவரே!
இனி எனக்கு கலக்கமில்லை,
இந்தத் தொழில் பற்றி வருத்தமில்லை,
மழையைப் பார்த்தால்ஆகாதையா!
விரைந்து நான் போக வேண்டும்,
நாலு பேருக்காவது
நம்பிக்கை கொடுக்க வேண்டும்!”

நெல்லையப்பன் கவிதைகள்-17: "நம்பிக்கை விற்பவன்"

மழையில் நனைந்தபடி வந்து,
கிளிக்கூண்டு நனையாதபடி
தன் பழைய சைக்கிளை நிறுத்திவிட்டு,
ரோட்டோர உணவகத்தின் உள்ளே,
பையத் துழாவி சில்லறைகளை
பலமுறை எண்ணிப்பார்த்துவிட்டு,
மழையால் தொழில் பாதிக்கப்பட்டதாக
மழையை கெட்டவார்த்தையில் திட்டி,
“இதெல்லாம் ஒரு பிழைப்பா?” என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு,
அரைச்சாப்பாடு கிடைக்குமா என்று
தயங்கியபடி கேட்டவனுக்கு,
தலைவாழை இல்லை போட்டு,
சிறப்பு சாப்பாடாக
ஒவ்வொன்றாய் பரிமாறியபடி
முதலாளி சொன்னார்:
“உன் பெருமை உனக்குப் புரியவில்லை;
அரசு செய்யமுடியாததை,
அப்பன் ஆத்தா செய்யத் தவறியதை,
கிளி ஜோதிடன், நீ செய்கின்றாய்!”
நீ நம்பிக்கை விற்கின்றாய்;
நாடிவருபவற்கு நல்லது சொல்கின்றாய்;
உருப்படாமல் போய்விடுவாய் என்று
ஒருவருக்கும் நீ சொல்வதில்லை.
இடரினி இல்லை என்றும்,
விரைவில் துன்பம் விலகும் என்றும்,
நம்பிக்கை விதைக்கும் நீ
நல்ல தொழில் செய்கின்றாய்;
உனக்கு சாப்பாடு போடுவதில்

சந்தோசம் எனக்குத்தான் ;
பணம் தரவேண்டாம் நீ,
நன்றாகச் சாப்பிடப்பா”
வயிறுமுட்டச் சாப்பிட்டபின்
கிழிக்கும் உணவு தந்துவிட்டு,
கைதொழுது சொன்னான்:
“ஐயா, பெரியவரே!
இனி எனக்கு கலக்கமில்லை,
இந்தத் தொழில் பற்றி வருத்தமில்லை,
மழையைப் பார்த்தால்ஆகாதையா!
விரைந்து நான் போக வேண்டும்,
நாலு பேருக்காவது
நம்பிக்கை கொடுக்க வேண்டும்!”

சுக வாழ்க்கைக்கு விதிகள் – பிக்ஷூ சுவாமிகள்

1. கடவுளைத் துதிப்போம். அகம்பாவத்தை ஒழிப்போம். மனக் கவலையை ஒழிப்போம். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவோம். ஆசாபாசங்களை விடுவோம்.
௨. சுத்தமான காற்றில் வாசிப்போம்.
3. யோகாசனம், பிராணயாமம் முதலிய பயிற்ச்சிகள் செய்வோம்.
4. சுத்தமான தண்ணீரையே பருகுவோம். காப்பி, டீ, சோடா, மது விலக்குவோம்.
5. பசித்தே உண்போம். மாமிசம் விலக்குவோம். சைவ ஆகாரத்தையே அளவாக உண்போம். சமைக்காத பச்சைக் காய்கறி உண்பது நலம். உப்பு, காரம், புளி குறைவாகப் பயன்படுத்துவோம்.
6. அபினி, கஞ்சா, புகையிலை நீக்குவோம்.
7. சுத்தமான உடையையே குறைவாக உடுத்துவோம்.
8. சுத்தமான தண்ணீரிலேயே குளிப்போம்.
9. வாரத்தில் ஒருநாள் உபவாசம் இருப்போம். 1
10. நோய் வந்தால் நோன்பு இருப்போம். கூடிய வரையில் மருந்துகளைத் தவிர்ப்போம்.
11. பிரம்மச்சரியம் கடைப் பிடிப்போம்.
12. உலக ஆடம்பரத்திர்காகச் செலவழித்து அடிமையாகாதிருப்போம்.
13. நம்மால் இயன்றவரை உதவி செய்வோம். யாருக்கும் தீங்கு இழைக்காமல் இருப்போம்.
14. ஒருபொழுதும் சூதாடாமல் இருப்போம்.
15. மெய்ப்பொருள் ஆராய்ச்சி செய்து தன்னை அறிந்து பிரம்மானந்த மயமாக வாழ்வோம்.

நன்றி: “இயற்கை மருத்துவம், ஏன்?” – பிக்ஷூ சுவாமிகள்,

தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு (மதுரை), விலை: ரூபாய் பத்து மட்டும்.

எது கவிதை? – புதுமைப்பித்தன்

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனது உள் மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது. – புதுமைப் பித்தன்

சுக வாழ்க்கைக்கு விதிகள் – பிக்ஷூ சுவாமிகள்

1. கடவுளைத் துதிப்போம். அகம்பாவத்தை ஒழிப்போம். மனக் கவலையை ஒழிப்போம். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவோம். ஆசாபாசங்களை விடுவோம்.
௨. சுத்தமான காற்றில் வாசிப்போம்.
3. யோகாசனம், பிராணயாமம் முதலிய பயிற்ச்சிகள் செய்வோம்.
4. சுத்தமான தண்ணீரையே பருகுவோம். காப்பி, டீ, சோடா, மது விலக்குவோம்.
5. பசித்தே உண்போம். மாமிசம் விலக்குவோம். சைவ ஆகாரத்தையே அளவாக உண்போம். சமைக்காத பச்சைக் காய்கறி உண்பது நலம். உப்பு, காரம், புளி குறைவாகப் பயன்படுத்துவோம்.
6. அபினி, கஞ்சா, புகையிலை நீக்குவோம்.
7. சுத்தமான உடையையே குறைவாக உடுத்துவோம்.
8. சுத்தமான தண்ணீரிலேயே குளிப்போம்.
9. வாரத்தில் ஒருநாள் உபவாசம் இருப்போம். 1
10. நோய் வந்தால் நோன்பு இருப்போம். கூடிய வரையில் மருந்துகளைத் தவிர்ப்போம்.
11. பிரம்மச்சரியம் கடைப் பிடிப்போம்.
12. உலக ஆடம்பரத்திர்காகச் செலவழித்து அடிமையாகாதிருப்போம்.
13. நம்மால் இயன்றவரை உதவி செய்வோம். யாருக்கும் தீங்கு இழைக்காமல் இருப்போம்.
14. ஒருபொழுதும் சூதாடாமல் இருப்போம்.
15. மெய்ப்பொருள் ஆராய்ச்சி செய்து தன்னை அறிந்து பிரம்மானந்த மயமாக வாழ்வோம்.

நன்றி: “இயற்கை மருத்துவம், ஏன்?” – பிக்ஷூ சுவாமிகள்,

தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு (மதுரை), விலை: ரூபாய் பத்து மட்டும்.

எது கவிதை? – புதுமைப்பித்தன்

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கல்லாத கலை என்பார்கள். கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா? கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனது உள் மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது. – புதுமைப் பித்தன்